ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிசித்பூர் என்ற ஊரில் தண்டவாளத்தை தாண்டி செல்லும்போது தண்டவாளம் அருகே மின்கம்பம் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கியது. அப்போது, எதிர்பாராதவிதமாக இதில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 


ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோமோ-தன்பாத் ரயில்வே கோட்டத்தின் ஜார்கோர் கேர் அருகே உயர் அழுத்த கம்பி வழியாக மின்சாரம் தாக்கியத்தில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிடைத்த தகவலின்படி, உயிரிழந்த அனைவரும் தன்பாத் மற்றும் கோமோ ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஃபிக்ஸட்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என தெரிய வந்தது. 


மின்கம்பத்தை அமைக்கும்போது 25 ஆயிடம் வோல்ட் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதனால், 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க படலாம் என அஞ்சப்படுகிறது. 


பாய்ந்த 25,000 வோல்ட் மின்சாரம்:


தன்பாத் ரயில்வே கோட்டத்தின் ஹவுரா- புது டெல்லி வழித்தடத்தில் தன்பாத் - கோமோ ரயில் நிலையம் இடையே நிஷித்பூர் ரயில் கேட் அருகே மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த இடமானது கட்ராஸ் ரயில் நிலையத்திலிருந்து சரியாக 1 கி.மீ தொலையில் உள்ளது. இங்கு மின்கம்பத்தை அமைக்கும்போது, சுமார் 25,000 வோல்ட் உயர் அழுத்த அளவில் மின்சாரம் பாயந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த தடம் வாயிலாக செல்லவிருந்த ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. 


நிறுத்தப்படாத மின்சாரம்: 


இந்த பணியின்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் பணிகள் நடைபெற்றதாவும், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரும் உ.பி.யின் அலகாபாத்தைத் தவிர ஜார்கண்டில் உள்ள பலமு மற்றும் லதேஹரில் வசிப்பவர்கள். இறந்தவர்களில் கோவிந்த் சிங், ஷியாம்தேவ் சிங், சுரேஷ் மிஸ்திரி, ஷியாம் புய்யா, சஞ்சய் ராம் என தெரியவந்தது. 


இந்த விபத்தின்போது நிஷா குமாரி என்ற சிறுமியும் காயமடைந்துள்ளார். இவர் அருகில் இருந்த குழாய் அடி பம்பில் தண்ணீர் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.