இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2022-23 ஆம் ஆண்டில் வேலையின்மை சதவீதம் கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்தியாவில் வேலையின்மை முன்பு இருந்ததை விட கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022-23ல் 2.4% ஆக குறைந்துள்ளது என்றும், அதே நேரத்தில், நகர்ப்புறங்களில் வேலையின்மை 5.4 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அரசு நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்த பிறகு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.  

Continues below advertisement

ஐந்து அரசாங்க நிறுவனங்களின் தரவுகளின் பகுப்பாய்வில், கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS), EPFO, RBI, தேசிய தொழில் சேவைகள் NCS போர்டல் மற்றும் மத்திய அரசின் பல்வேறு வேலைகளை மையப்படுத்திய திட்டங்கள் ஆகியவற்றின் தரவுகளில் கடந்த சில ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும், வேலையின்மை விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு அல்லது PLFS தரவின்படி தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

2017-18ல் 46.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பு 2022-23ல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கான PLFS தரவு காட்டுகிறது. அதேபோல், தொழிலாளர் பங்கேற்பு 2017-18ல் 49.8 சதவீதத்திலிருந்து 2022-23ல் 57.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது.

குறிப்பாக பெண்களிடையே வேலையின்மை குறைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2017-18ல் 5.3 சதவீதத்தில் இருந்து 2022-23ல் 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் 7.7 சதவீதத்தில் இருந்த வேலையின்மை 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்களிடையே வேலையின்மை விகிதம் 2017-18ல் 5.6 சதவீதத்தில் இருந்து 2022-23ல் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 17.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் படித்த நபர்களுக்கான வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது PLFS தரவு காட்டுகிறது. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2017-18ல் 49.7 சதவீதத்திலிருந்து 2022-23ல் 55.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதுகலை பட்டதாரி மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் 67.8 சதவீதத்தில் இருந்து 70.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தரவுகளின் பகுப்பாய்வில் 6.1 கோடி நபர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில். RBI ஆல் வெளியிடப்பட்ட சமீபத்திய KLEMS தரவுத்தளமும் (பொருளாதாரத்தின் 27 தொழில்கள்/துறைகளை உள்ளடக்கியது) 9 ஆண்டுகளில் நாட்டில் 2013-14ல் 47 கோடியாக இருந்த வேலை வாய்ப்பு 2021-22ல் 55.3 கோடியாக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. 2022-23 உடன் ஒப்பிடும்போது 2023-24 இல் 214 சதவீதம் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தேசிய தொழில் சேவை (NCS) போர்டல் கண்டுள்ளது.

Continues below advertisement