அருணாச்சல பிரதேசத்தில் நடந்த புத்த மத மாநாடு; துறவிகள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

சர்வதேச புத்த கூட்டமைப்பின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்றது.

Continues below advertisement

சர்வதேச புத்த கூட்டமைப்பு கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து, அருணாச்சலப் பிரதேசத்தின நம்சாயில் நகரத்தில், "புத்தரின் போதனைகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம்" என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருணாச்சலப் பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் பங்கேற்றார்.

Continues below advertisement

புத்த மரபுகள்:

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றை உள்ளடக்கிய வடகிழக்கு இந்தியா, புத்த மரபுகள், துறவற கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான குறிப்பிடத்தக்க மையமாகும். இந்தப் பகுதி தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயானம் உள்ளிட்ட பல்வேறு புத்த மரபுகளைப் பாதுகாத்து பரப்பியுள்ளது.

இந்தப் பகுதியில் புத்த தர்மத்தின் இருப்பை வலுப்படுத்த, புத்த சுற்றுலா, பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றத் திட்டங்களை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. "புத்த தர்மம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம்" என்பதன் முக்கியத்துவத்தை ஆராய, இந்த 2 நாள் நிகழ்வு நடைபெற்றது. 

முதல் நாளான நேற்று அதன் வரலாற்று பொருத்தம், பிராந்தியத்தின் கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் அண்டை நாடுகளில் புத்த தர்மத்தின் கலாச்சார தாக்கம் குறித்த மூன்று தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று புகழ்பெற்ற தங்க பகோடாவில் விபாசனா பயிற்சி மற்றும் உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வதற்கு அர்ப்பணிக்கப்படும்.

வரலாற்று ரீதியாக, அசோக பேரரசரின் ஆட்சிக் காலத்தில் புத்த தர்மம் வடகிழக்கு இந்தியாவை அடைந்து பிற அண்டை பகுதிகளுக்கும் விரிவடைந்தது. இந்தியாவை தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் புத்த கலாச்சார வழித்தடத்தில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

வடகிழக்கு இந்தியாவில் புத்தம்:

மேலும், வடகிழக்கு இந்தியா புத்த தர்மத்தை தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்களுடன் ஒருங்கிணைத்த பல பழங்குடியினரின் தாயகமாகும். பல்வேறு புத்த மரபுகள், தேரவாதம், மகாயானம் மற்றும் வஜ்ராயணம் ஆகியவை இங்கு செழித்து வளர்கின்றன.

உயர் புத்த மத படிநிலையின் ஆதரவின் கீழ் நிறுவப்பட்ட இது, தற்போது உலகளவில் துறவிகள் மற்றும் சாதாரண மக்கள் என இரு தரப்பினரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது, இதில் உலக அமைப்புகள், தேசிய மற்றும் பிராந்திய கூட்டமைப்புகள், ஒழுங்குகள், கோயில் அமைப்புகள் மற்றும் மடங்கள் போன்றவை அடங்கும்.

சர்வதேச புத்த கூட்டமைப்பு:

2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு சர்வதேச பட்டறையின் போது சர்வதேச புத்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது, அங்கு 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியாவில் ஒரு புதிய சர்வதேச பௌத்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஒருமனதாக ஒப்புக்கொண்டனர், இது உலகளாவிய பௌத்தர்களுக்கு ஒரு பொதுவான தளமாக செயல்படும் புத்த தர்மத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரப்புதலின் இடமாகும்.

கூட்டு ஞானம், ஐக்கிய குரல் என்ற அதன் குறிக்கோளின் அடிப்படையில், சர்வதேச புத்தக் கூட்டமைப்பு அனைத்து மனிதகுலத்தையும் பற்றிய பிரச்சினைகளில் ஒன்றுபட்ட பௌத்த குரலை முன்வைப்பதன் மூலம் பௌத்த மதிப்புகள் மற்றும் கொள்கைகளை உலகளாவிய சொற்பொழிவின் ஒரு பகுதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola