பிரபல இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் , தனது 6 வயது மகளுக்கு விமான ஊழியர்கள் உணவு தரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.


”அழுத குழந்தைக்கு சாப்பாடு தரலைங்க “


டாக்டர் OBGYN என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவர் உடன் அழைத்துச்சென்ற 6 வயது மகளுக்கு பசி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அழ தொடங்கியிருக்கிறார். உடனே விமான ஊழியர்களிடம் , தனது குழந்தைக்கு பசிக்கிறது ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள் , அதற்கான விலையை நான் செலுத்தி விடுகிறேன் என கூறியிருக்கிறார். பலமுறை கோரிக்கை விடுத்த பிறகு , கார்ப்பரேட் வாடிக்கையாளருக்குதான் முதலில் சேவை செய்ய வேண்டும். என கேபின் குழு கூறியதாகவும் , இறுதி வரைக்கும் அழுத தனது மகளுக்கு உணவு தரவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.







மன்னிப்பு கோரிய இண்டிகோ :


OBGYN செய்த ட்வீட் வைரலானதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக பதிலளித்தது. அதில் “ நீங்கள் சந்தித்த பிரச்சனையை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. உங்களது குழந்தை தற்போது நலமாக இருப்பார் என நம்புகிறோம்.நாங்கள் இது தொடர்பாக சரிபார்த்து, நாளை உங்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு தொடர்புக்கொள்கிறோம் “ என தெரிவித்திருந்தது.






எதிர்வினைகள் :


OBGYN  செய்த ட்வீட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்தான் முன் எச்சரிக்கையாக  செயல்பட வேண்டும். டிக்கெட் புக் செய்யும் பொழுதே உணவினையும் சேர்த்து ஆடர் செய்திருக்கலாம் . அல்லது  குழந்தைக்கு தேவையான திண்பண்டங்களை நீங்கள் கையில் எடுத்து வந்திருக்க வேண்டும் என எதிர்வினையாற்றி வருகின்றனர்.






முன்னதாக இதே போன்றதொரு சம்பவத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு  DGCA  5 லட்சம் அபராதம் வழங்கப்பட்டது. சிறப்பு உதவி பெறும் டீன் ஏஜர் ஒருவரை  இண்டிகோ விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்த விவகாரம் பூதாகரமானது . இது   DGCA  பார்வைக்கு வந்த பிறகு , சம்பந்தப்பட்ட ஊழியர் மன்னிப்பு கேட்டார். மேலும்  தலைமை நிர்வாக அதிகார அந்த குழந்தைக்கு சர்க்கர நாற்காலி வழங்கவும் முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.