✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?

செல்வகுமார்   |  08 Sep 2024 05:31 PM (IST)

Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வைரஸ் தொற்று ( செயற்கை நுண்ணறிவு )

தற்போது Mpox குரங்கு அம்மை தொற்றுள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த, இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் வயது கொண்ட ஆண்  ஒருவருக்கு, குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் , குரங்கு அம்மை தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

 

இந்நிலையில் நோயாளி ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். நோயாளியின் மாதிரிகள் Mpox இருப்பதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ஏ,என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. 

ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை:

ஆப்பிரிக்கா, காங்கோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் Mpox தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox-யை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

காங்கோ குடியரசு நாட்டில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை, பல்வேறு நாடுகளிலும் பரவியது.  இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவாகியுள்ளனர்.

இந்த நோய் தொற்றால் காங்கோ குடியரசில் மட்டும் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எச்சரிக்கை:

இந்நிலையில், ஆப்பிரிக்காவில் பரவலையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கையானது பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குரங்கு அம்மை தொற்று பரவல் உள்ள நாட்டில் இருந்து பயணம் செய்த நபருக்கு , தொற்று இருப்பதற்கான சந்தேகம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் , குரங்கு அம்மை தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Also Read: Mpox Outbreak: குரங்கு அம்மை வைரஸ் பற்றி தெரியுமா? WHO வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!

Published at: 08 Sep 2024 04:58 PM (IST)
Tags: Mpox INDIA
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.