நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல். அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத் இன்று காலமானார். அவருக்கு வயது 89. மாரடைப்பு காரணமாக தேவிசிங் ஷெகாவத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


தேவிசிங் ஷெகாவத் மறைவு குறித்து பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல் குறிப்பில்,  குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் தெரிவித்தார்.