இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 81 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665-இல் இருந்து  ஒரு  கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 131-ஆக அதிகரித்துள்ளது.




ஒரே நாளில் கொரோனாவுக்கு 469 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 927-இல் இருந்து ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 396-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 50 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 683-ல் இருந்து  ஒரு கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 39 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 63 லட்சத்து 89 ஆயிரத்து 138 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.