இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 72 ஆயிரத்து 330 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335-இல் இருந்து ஒரு  கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து 665-ஆக அதிகரித்துள்ளது.




 


ஒரே நாளில் கொரோனாவுக்கு 459 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 468-இல் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 927-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 40 ஆயிரத்து 382 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை  ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301 -இல் இருந்து ஒரு கோடியே 14 லட்சத்து 74 ஆயிரத்து 683 ஆக உள்ளது. இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 17 ஆயிரத்து 896 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.