கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவிவருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 



இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.92 லட்சம், நேற்று 3.68  லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.57 லட்சமாக குறைந்துள்ளது. 4 லட்சத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு மூன்றாவது நாளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604-இல் இருந்து இரண்டு கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு மூவாயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 959-ல் இருந்து இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 408-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 93 ஆயிரத்து 003-இல் இருந்து ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India reports 3,57,229 new COVID19 cases, 3,20,289 discharges and 3,449 deaths in the last 24 hours, as per Union Health Ministry <br><br>Total cases: 2,02,82,833<br>Total recoveries: 1,66,13,292<br>Death toll: 2,22,408<br>Active cases: 34,47,133<br><br>Total vaccination: 15,89,32,921 <a >pic.twitter.com/Zr1mimN4vH</a></p>&mdash; ANI (@ANI) <a >May 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 81.77 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.10 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 133-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 33 ஆயிரத்து 491 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நேற்று 63 ஆயிரத்து 998 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதியாக குறைந்துள்ளது. இதுவரை 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணிக்கை குறைந்த அளவு இறப்பு விகிதமும் குறைந்தால் மக்களின் அச்ச உணர்வு மாறும் என்பதால் அதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.