= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
எந்த நாடும் உற்பத்தி செயல்பாடுகள் இல்லையெனில் வளர முடியாது : அரவிந்த் பனாக்ரியா எந்த நாடும் உற்பத்தி செயல்பாடுகள் இல்லையெனில் வளர முடியாது. சேவைகளை கொண்டு மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் என்பது அர்த்தமற்ற பேச்சு : அரவிந்த் பனாக்ரியா
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE : 370 சட்டப்பிரிவு ரத்து குறித்து பேசிய உமர் அப்துல்லா 370 சட்டப்பிரிவு ரத்து குறித்து பேசிய உமர் அப்துல்லா
அப்போதைய ஆளுநர் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என கூறியதாகப் பேசிய உமர் அப்துல்லா, அப்படியான விஷயத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE: ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் நாள் மாநாடு நிறைவு ஏபிபி ஐடியாஸ் ஆஃப் இந்தியாவின் முதல் நாள் மாநாடு நிறைவு பெற்றது. மீண்டும் நாளை தொடங்கும்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
”யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என, என் அம்மா கூறியிருக்கிறார்” - அமீர் கான் உருக்கம் யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என, என் அம்மா கூறியிருக்கிறார், தெரியாமல் கூட யாரையும் சிரமப்படுத்தியிருந்தால் , உடனே மன்னிப்பு கேட்பேன் என அமீர்கான் உருக்கமாக தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE: கதைகளில் சமூகப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்வேன்- அமீர்கான் "சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம். எனது கதைகளில் முக்கியமான சமூகப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்று நான் எப்போதும் கேட்டுக்கொள்வேன் என அமீர்கான் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அமீர்கான் திரைப்படத்தை கிரண் ஏன் இயக்குவதில்லை... இருவரும் அளித்த பதில் என்ன? நான் கிரணிடம் கதையை வழங்கி,அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு கிரண் தெரிவித்ததாவது, நீ பெரிய நடிகர், நீ என் படத்தில் இருப்பது பொருததமாக என தெரிவித்தர். அதையடுத்து, ஒரே படத்தில் இருவரும் இருக்க கூடாது என புரிந்து கொண்டோம்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"கிரண் ராவ் மிகவும் நேர்மையான திரைப்பட தயாரிப்பாளர்"- அமீர்கான் "கிரண் ராவ் மிகவும் நேர்மையான திரைப்பட தயாரிப்பாளர்" என்று அமீர்கான தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ராமராஜ்ஜியத்தை எப்படிப்பட்ட தலைவர் உருவாக்குகிறார் என்பதை ராமாயணம் தெரிவிக்கிறது - அமிஷ் திரிபாதி பெரும்பாலான ராமாயண பதிப்புகள் ராமரின் பயணங்களை விவரிக்கின்றன, ராமராஜ்யம் பற்றி விரிவாகப் பேசப்படவில்லை. இது மற்ற நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளது. ராமராஜ்ஜியத்தை எப்படிப்பட்ட தலைவர் உருவாக்குகிறார் என்பதை ராமாயணம் கூறுகிறது என ராமராஜ்யம் குறித்து அமிஷ் திரிபாதி கூறினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஒவ்வொருவருக்கும் குடும்ப மரபைச் சுமந்து செல்லும் பொறுப்பு உள்ளது- நவ்யா நவேலி ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்ப மரபைச் சுமந்து செல்லும் பொறுப்பு உள்ளது என நிமய்யா நிறுவனத்தின் இணை நிறுவனர் நவ்யா நவேலி தெரிவித்தார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதை சொல்வதற்காகத்தான் வன்முறைக் காட்சிகள் - இயக்குநர் அட்லி அடுத்த தலைமுறைக்கு எது தவறு என்பதை சொல்வதற்காகத்தான் எனது படங்களில் வன்முறைக் காட்சிகளை வைக்கின்றேன். ஒரு மருத்துவர் ஊசி போடும்போது நமக்கு வலிக்கத்தான் செய்யும். ஆனால், அது நமது உடலில் இருக்கும் நோயை குணப்படுத்த உதவுவதைப் போல், எனது படங்களில் அடுத்த தலைமுறையினருக்கு எது தவறு எனச் சொல்வதற்காகத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட வன்முறைக் காட்சிகளை நான் படமாக்குகின்றேன் என இயக்குநர் அட்லி பேசியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கையானது, மலைகளின் சூழலியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது- சோனம் வாங்சுக் சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் மலைகளில் சுரங்கம் தோன்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பேசினார். ”பெரு நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையானது, லடாக் போன்ற மலைகளின் சூழலியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். மலைவாழ் மக்கள் எளிமையாக வாழலாம்” என தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இன்றைய எதிர்க்கட்சி நாளைய ஆளும் கட்சியாக இருக்கும் - சசி தரூர்.. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, எனவே எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது தெரியவில்லை.
அடுத்த அரசாங்கமாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சியை விட்டுவிடாதீர்கள் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்தார். அதற்கு பாஜக முன்னாள் எம்.பி சந்திர பிரகாஷ் அகர்வால் தெரிவித்ததாவது, கற்பனைக்கு எல்லையில்லை என சசி தரூருக்கு பதிலளித்தார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிரதமர் வேட்பாளராக எந்தவொரு தனிநபரையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை - சசி தரூர் பிரதமர் வேட்பாளராக எந்தவொரு தனிநபரையும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் பத்திரம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிகச் சரியாக மற்றும் நியாயமாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
உ.பி.யில் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாகிவிட்டது- பாஜக முன்னாள் எம்.பி. சந்திர பிரகாஷ் அகர்வால் "40 ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது. குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றச் செயல்களுக்கு எதிராக யோகி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கிறது. உ.பி.யில் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாகிவிட்டது என பாஜக முன்னாள் எம்.பி. சந்திர பிரகாஷ் அகர்வால் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது - எம்.பி. சசி தரூர் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
”சிறந்த தொழில்முனைவோராக இருப்பதற்கு, உங்களிடம் நிறைய பணம் இருக்க அவசியமில்லை” - ராஜேஷ் அக்ரஹாரி சிறந்த தொழில்முனைவோராக இருப்பதற்கு, உங்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும் அல்லது தொழில்துறை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
1980ல், மசாலாப் பொருள்களை அரைத்து, சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து, கிராமங்களில் விநியோகிக்க ஆரம்பித்தோம். இன்று ராஜேஷ் மசாலா நிறுவனமானது, ஆயிரத்து 500 கோடி வருவாய் உள்ள நிறுவனமாக இருக்கிறது. மக்கள் தாங்கள் பயன்படுத்துவதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது என்கிறார் தொழில்முனைவோர் ராஜேஷ் அக்ரஹாரி.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
இயற்கை சிகிச்சை முறைகளை விட சிறந்தது எதுவுமில்லை- ஆயுர்வேத நிபுணர் ஆச்சார்யா மணீஷ் நவீன சிகிச்சை முறைகளை கும்பல் கட்டுப்படுத்துகிறது. ஆங்கிலேயர்கள் துப்பாக்கிகளால் கொன்றனர். இப்போது மாத்திரைகளால் கொல்லப்படுகிறோம். இயற்கை சிகிச்சை முறைகளை விட சிறந்தது எதுவுமில்லை என ஆயுர்வேத நிபுணர் ஆச்சார்யா மணீஷ் தெரிவித்தார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
"ஜனநாயகத்தை நிலைநாட்டுவதும் கடினம் கடைப்பிடிப்பதும் கடினம் - சுனில் கில்னானி "ஜனநாயகத்தை நிலைநாட்டுவது கடினம். அதைக் கடைப்பிடிப்பதும் கடினம். வரலாறு முழுவதும் அதிகாரம் என்பது ஏகபோக வர்த்தகமாகவே இருந்து வருகிறது. இந்திய ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றால், அது குறித்தான சுய விழிப்புணர்வு நமக்குத் தேவை" என்கிறார் சுனில் கில்னானி.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE: குழந்தைகளுக்கு கலைகளை அறிமுகப்படுத்த பெற்றோர்கள் தயங்குகிறார்கள் - ஓவியர் சுபோத் குப்தா ABP Ideas of India 3.0 LIVE: குழந்தைகளுக்கு கலைகளை அறிமுகப்படுத்த பெற்றோர்கள் தயங்குகிறார்கள் என ஓவியர் சுபோத் குப்தா தெரிவித்தார். மேலும், உலகத்தில் சில கலைஞர்கள் பிரபலமாக இருப்பதை வைத்து ஒட்டுமொத்த கலைஞர்களின் நிலைமையை எடை போடக் கூடாது. பொது இடங்களில் கலைகளை காட்சிப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. கலைஞர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கலைஞர் சுபோத் குப்தா தெரிவித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE : துணை முதல்வராக எனது பணிகளை முதல்வர் ஷிண்டே அங்கீகரிக்கிறார் - தேவேந்திர ஃபட்னாவிஸ் ABP Ideas of India 3.0 LIVE : துணை முதல்வராக எனது பணிகளை முதல்வர் ஷிண்டே அங்கீகரிக்கிறார் - தேவேந்திர ஃபட்னாவிஸ்
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு விதமாக செயல்படும். துணை முதல்வராகவும் என்னால் நன்றாக செயல்படமுடியும். முதல்வர் ஷிண்டே என் செயல்பாடுகளை அங்கீகரிக்கிறார் - தேவேந்திர ஃபட்னாவிஸ்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE : இளைய தலைமுறைக்கான கற்றல் தேவைகளை இன்றைய இண்டெர்நெட் ஆசிரியர்கள் பேசுகிறார்கள்.. இளைய தலைமுறையில் கற்றல் தேவைகள், கற்றலில் இருக்கும் சவால்கள் ஆகியவற்றைக் குறித்து பேசிவருகிறார் விஜேந்தர் சிங் செளஹான், பேராசிரியர், டெல்லி பல்கலைக்கழகம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 LIVE : முடியாது என சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - அன்னபூரணி சுப்ரமணியம், ஐஐஏ இயக்குநர் ABP Ideas of India 3.0 LIVE : முடியாது என சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - அன்னபூரணி சுப்ரமணியம், ஐஐஏ இயக்குநர்
உங்கள் இலக்குகள் எட்டப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். யாரேனும் சில விஷயங்களை உங்களிடம் திணித்தால், நோ சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் - அன்னபூரணி சுப்ரமணியம், ஐஐஏ இயக்குநர்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ABP Ideas of India 3.0 : பெண்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் என நிரூபித்துள்ளனர் - நந்தினி ஹரிநாத் ABP Ideas of India 3.0 : பெண்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள் என நிரூபித்துள்ளனர் - நந்தினி ஹரிநாத், துணை இயக்குநர், ISTRAC, ISRO.