நான் தினமும் வீட்டிலேயே குளிப்பேன்: கும்பமேளா குறித்து முன்னாள் முதலமைச்சர் அளித்த பதில்
உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் கூடும் மகா கும்பமேளாவைப் பார்வையிடுவதற்கான தனது திட்டங்கள் குறித்து தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா பேசினார்.

கும்பமேளா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது நான் வீட்டிலேயே குளிப்பேன் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் கூடும் மகா கும்பமேளாவைப் பார்வையிடுவதற்கான தனது திட்டங்கள் குறித்து தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா பேசினார்.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிடம் கும்ப மேளாவில் புனித நீராட திட்டமிட்டுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் தினமும் வீட்டில் குளிப்பேன்" என்று பதிலளித்தார்.
மேலும், “என் வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
இந்திய கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் என்றும் மூத்த தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சிகள் 'சனாதனத்திற்கு எதிரானவர்கள்' என்றும், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பொய் சொல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார். சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு பெரிய விபத்தை விரும்புவதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில் "சனாதன தர்மத்தின் இந்த மகத்தான நிகழ்வை முழு தேசமும் உலகமும் பெருமையுடன் பார்க்கின்றன. மறுபுறம், சனாதன தர்மத்திற்கு எதிராக சில சக்திகள் சதி செய்கின்றன” எனத் தெரிவித்தார்.