'நான் மோடியின் ரசிகன்…' - இந்தியாவையும் மோடியையும் குறித்து புகழ்ந்த உலக பணக்காரர் எலன் மஸ்க்!

"மோடி புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்பும் அதே நேரத்தில், அதில் இந்தியாவின் நன்மையும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். நான் மோடியின் ரசிகன்" என்று மஸ்க் ANI வீடியோவில் கூறினார்.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுப் பயணத்தின் போது, பிரபல தொழிலதிபர், உலக பணக்காரர் எலன் மஸ்க்கை, நியூயார்க்கில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எலன் மஸ்க் தன்னை ஒரு மோடி ரசிகர் என்று விவரித்த சம்பவமும் நடைபெற்றது.

Continues below advertisement

நான் மோடியின் ரசிகன்

உலகின் வேறு எந்த பெரிய தேசத்தையும் விட இந்தியா அதிக நம்பிக்கையை கொண்டுள்ளது என்று மஸ்க் பாராட்டினார். இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் ஆழமான அக்கறையை ஒப்புக்கொண்ட மஸ்க், நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய டெஸ்லாவை வலியுறுத்தியதற்காக பிரதமரைப் பாராட்டினார். மேலும் அதற்கான நேரம் வர காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். "அவர் இந்தியாவிற்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், ஆனால் அதே நேரத்தில், அதில் இந்தியாவின் நன்மையும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். நான் மோடியின் ரசிகன்" என்று மஸ்க் ANI வீடியோவில் கூறினார்.

இந்தியாவில் ஸ்டார்லிங் இண்டர்நெட்

மேலும் பேசிய அவர், "அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர, நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். அதற்காகவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஸ்டார்லிங் இண்டர்நெட்டை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். இதன்மூலம், இந்தியாவில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமங்களுக்கு பெரிய அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: Yoga Day 2023 LIVE: சர்வதேச யோகா தினம்- இந்தியாவில் களைகட்டிய கொண்டாட்டம்! அப்டேட்ஸ் இதோ

இந்தியாவின் வளர்ச்சியை காட்டுகிறது

மஸ்க் மற்றும் மோடிக்கு இடையேயான சந்திப்பு நேர்மறையான தனிப்பட்ட நல்லுறவை பிரதிபலித்தது மட்டுமல்லாமல், டெஸ்லாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் உறவை அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்தியாவின் திறனை மஸ்க் அங்கீகரிப்பது, உலகப் பொருளாதாரத்தில் நாட்டின் வளர்ச்சியை எடுத்து காட்டுகிறது. எதிர்கால முதலீடுகளுக்கான பிரதான இடமாக இந்தியா உயர்ந்து நிற்பதையும் அவரது பேச்சு காட்டுகிறது.

இந்தியாவின் வணிக சூழல்

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவராகவும், மின்சார வாகனத் துறையில் முன்னோடியாகவும் இருக்கும் மஸ்கின் இந்த கூற்றுகள், இந்தியாவை அவர் எப்படி எடை போட்டுள்ளார் என்பதை காட்டுகிறது. அவரது உணர்வுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நேர்மறையான பாதையையும், சாதகமான வணிக சூழலை வளர்ப்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகின்றன. 

Continues below advertisement
Sponsored Links by Taboola