இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் - சாதனை படைத்த ஷிவ்பால்..!

அனைவருக்கும் சில தவறுகள் உள்ளன. ஆனால் உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அவற்றை அடைவதே முக்கியம் என்று கூறுகிறார் ஷிவ்பால்.

Continues below advertisement

ஹைதராபாத்தை சேர்ந்த அட்டிப்பள்ளி ஷிவ்பால், நாட்டிலேயே  ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Continues below advertisement

சுமார் மூன்றடி உயரம் கொண்ட 42 வயது நபர், அனைத்து முரண்பாடுகளையும் வென்று தனது மாவட்டமான கரீம்நகரில் மாற்றுத்திறனாளியாக பட்டப்படிப்பை முடித்த முதல் நபர் ஆவார். 2004 இல் பட்டப்படிப்பை முடித்தார்.

"எனது உயரம் காரணமாக மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள். இன்று நான் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பலவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டேன். குள்ளமானவர்கள் பலர்  என்னை ஓட்டுநர் பயிற்சிக்காக தொடர்பு கொள்கிறார்கள்” என்று ஷிவ் பால் கூறினார்.

அதிக லட்சியம் கொண்ட இவர், உடல் ஊனமுற்றோருக்கான ஓட்டுநர் பள்ளியை அடுத்த ஆண்டு தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறினார். ஷிவ்பால் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் 2000 ஆம் ஆண்டு ஹைதராபாத் வந்ததாக கூறுகிறார். மேலும். தான் மூத்த மகன் மற்றும் குடும்பத்தில் ஒரே குள்ளமான நபர் என்றும் குறிப்பிடுகிறார்.


நகரத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்கான வேலை தேடுவதில் தனது போராட்டங்களை விவரித்த ஷிவ்பால், தொடக்கத்தில் திரைப்படங்களில் நடித்து தினசரி சம்பளம் பெற்றேன். ஆனால் நீண்ட காலம் தொழிலில் நிலைத்திருக்க முடியவில்லை. மாற்றுத்திறனாளியான எனக்கு வேலை வழங்க மக்கள் தயாராக இல்லை, நண்பர் மூலம், தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து, கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருகிறேன். பயணம் செய்ய, நான் கார்களை முன்பதிவு செய்யும் போதெல்லாம், அவர்கள் சவாரியை ரத்து செய்வார்கள். நான் என் மனைவியுடன் வெளியே செல்லும்போது, ​​மக்கள் மோசமான கருத்துக்களைக் கூறினர். அப்போதுதான் நான் சொந்தமாக ஒரு காரை ஓட்ட முடிவு செய்தேன். டிரைவிங் கற்றுக்கொள்வது தொடர்பாக இணையத்தில் அமெரிக்காவில் ஒரு நபர் பதிவேற்றிய வீடியோவைக் கண்டுபிடித்தேன். அதில், காரில் இருக்கை மற்றும் பிற உபகரணங்களை எனது உயரத்திற்கு உயர்த்துவதற்கு தேவையான மாற்றங்களை செய்ய தெரிந்துக்கொண்டேன்.


காரை மாற்றியமைத்த பிறகு, ஒரு நண்பரிடம் கார் ஓட்ட கற்றுக்கொண்டேன். ஆனால், போக்குவரத்துத் துறை உயரத்திற்கு சில வழிகாட்டுதல்களை வைத்திருந்ததால், உரிமம் பெறுவது மற்றொரு சவாலாக இருந்தது. எனது போராட்டங்கள் இத்துடன் முடிவடையவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு, மூன்று மாதங்களுக்கு  ஓட்டுநர் உரிமம் பெற்று, பின்னர் ஒரு அதிகாரியை வைத்து முறையான ஓட்டுநர் சோதனை நடத்தி ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றேன். அனைவருக்கும் சில தவறுகள் உள்ளன. ஆனால் உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அவற்றை அடைவதே முக்கியம்” என்று கூறினார்.

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொட

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement