தமிழ்நாடு



  • வேங்கைவயல் கிராம குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி எஸ்பி வீடு வீடாகச் சென்று விசாரணை 

  • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்திப்பு. மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் ஓபிஎஸ் பேட்டி.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு.

  • இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும்,  சின்னம் முடங்கக் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

  • இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்புடன் பேசத் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னம் தங்களுக்கே என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பளிக்க கட்சி மேலிடத்திடம் கேட்டிருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு.

  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக அறிவிப்பு

  • சென்னை, மெட்ரோ ரயிலின் மூன்றாவது வழித்தடத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல்.தரமணி, மயிலாப்பூர், பக்கிங்ஹாம் கால்வாய் அடிப்பகுதியில் விரைவில் கட்டுமானப் பகுதிகள் தொடக்கம்.


இந்தியா



  • பாஜகவில் சேராவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மத்தியப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

  • பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

  • தை அமாவாசையை ஒட்டி உத்திரப் பிரதேசம், பிரயக்ராஜில் சுமார் 1.5 கோடி பேர் கங்கை சங்கமத்தில் புனித நீராடினர்.


உலகம்



  • பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார்.

  • காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  • கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


விளையாட்டு



  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது

  • ராய்ப்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.