* சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை நாளை வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


* மேற்கு வங்க மாநிலம் பபானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அவர் முதலமைச்சராக நீடிப்பதில் இருந்த சிக்கல் நீங்கியது.


* உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


* T23 என்ற புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடைபெற்று வருவதாகவும், புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என தமிழ்நாடு முதன்மை தலைமை வனஉயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் 
கூறியுள்ளார். 


* நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.


* அதிமுக தோல்விக்கு காரணம் வியூகங்கள் சரியில்லாதது தான் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


* சட்டப்பேரவை தேர்தலில் நல்லாட்சி மலர்வதற்கு வாக்களித்த நீங்கள் உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


* டெல்டா தவிர புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


* பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணி மூன்றாவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தாவின் ப்ளே ஆப் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.


* இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பெண்கள் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.


* ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.


* ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.