சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டுப்படாது என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, மாநிலங்களின் நிதிச் சுதந்திரம் மற்றும் கூட்டுறவுக் கூட்டாட்சியின் முக்கியத்துவம் பற்றிய விவாதத்திற்கு புதிய ஆற்றலைக் கொடுக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.


நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் மற்றும் விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் நம்பகத்தன்மையான மதிப்பைக் கொண்டிருக்கும் என்று கூறியது. ஜிஎஸ்டி தொடர்பான விஷயங்களில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் இரண்டும் சமமாக சட்டம் இயற்றலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு பரிந்துரை அமைப்பு மட்டுமே என்றும், அதன் பரிந்துரைகள் மத்திய அல்லது மாநிலங்களுக்கு கட்டுப்படாது என்றும் அமர்வு கூறியுள்ளது.


சிலானா மற்றும் சிலானா சட்ட அலுவலகங்களின் நிர்வாகப் பங்குதாரரான சந்தீப் சிலானா கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் இத்தகைய அவதானிப்புகள் பிரிவு 279Aக்குக் கீழ் வந்தாலும் ​​மாநிலங்கள் அதன் சொந்த முடிவை எடுப்பதற்கும், நிதி சுதந்திரம் குறித்த விவாதத்திற்கும் புதிய ஆற்றலை இது அளிக்கும். கூட்டாட்சித் தத்துவத்தின் வழியாக ஜிஎஸ்டி வரி தனது முழுமையான வெற்றியை அடைய இது வழிவகுக்கும்” எனக் கூறியுள்ளார்.


முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் குஜராத் நீதிமன்றம் ஐ ஜிஎஸ்டி சார்பாக அளித்த தீர்ப்பு மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ஜிஎஸ்ட் வரி தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய மாநில அரசுகள் ஆகிய இரண்டிற்கு சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில்,  “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே2021 என்னை GST கவுன்சிலுக்கு நியமித்ததிலிருந்தே இதை நான் கூறிவருகிறேன். இத்தீர்ப்பு அதனை தெளிவுபடுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. GST-இல் முழு மாற்றங்கள் தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் இந்தப் பதிவில் அவர் தன்னுடைய உரையையும் பதிவிட்டுள்ளார். அந்த உரையில், “இவை அனைத்தையும் பார்க்கும் போது, நாம் அரசியலமைப்பு சட்டத்தின்படியும். வரலாற்று ரீதியாகவும் ஓர் விந்தையான இடத்தை நோக்கி நகர்ந்துள்ளோம் - சர்வ வல்லமை படைத்த அனைத்து தளங்களையும் கூர்நோக்கும். ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் எதிர்நோக்காத ஒரு GST மன்றம். இம்மன்றத்திற்கு அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப தள அடிப்படையிலும் போதுமான வசதிகள் இல்லை.


இந்த மன்றம் வெறுமென ஓர் அடையாள சடங்காக, முத்திரை குத்த மட்டுமே செயல்படும் போது தான் இந்த வித்தை அபாயகரமாக கொள்கைகளை வகுக்கும் உண்மையான மாறுகிறது. அதிகாரம் (சட்டப்படி) CRICயின் TRU, பலவீனமான GST செயலகம் தோற்றத்தில் மட்டுமே அரசாங்கத்தை பிரதிபலிக்கும் GST பிணையம் போன்ற சில தற்காலிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது” என்பதை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.