✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

செல்வகுமார்   |  12 Jul 2024 04:54 PM (IST)

Emergency Day: 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி

ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி , முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அவசரநிலை பிரகடனம்:

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது, "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஒரு சர்வாதிகார மனநிலையோடு,  தேசத்தின் மீது அவசரநிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை கழுத்தை நெரித்தார். மேலும் ஊடகங்களின் குரலானது அடக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை அரசியல் படுகொலை தினமாக ('சம்விதான் ஹத்யா திவாஸ்') அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசர நிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்” என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

 

”கொடூரங்களை தடுக்கும்”

மேலும் அமித்ஷா தெரிவிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முடிவானது, அடக்குமுறை அரசாங்கத்தின் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை புதுப்பிக்க போராடிய லட்ச கணக்கான மக்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கமாகும் "சம்விதான் ஹத்யா திவாஸ்' அனுசரிப்பானது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனி மனித சுதந்திரத்தையும், நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும், இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், மீண்டும் இதுபோன்ற கொடூரங்களை செய்வதைத் தடுக்கும் என மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Published at: 12 Jul 2024 04:20 PM (IST)
Tags: pm modi BJP emergency Amit Shah congress National Emergency inidra gandhi
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • Emergency: ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.