ஜார்கண்ட் மாநிலத்தில் விநாயகருக்கு முழு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


விநாயகர் சதுர்த்தி


விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் வழக்கமான உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மூன்று நாள் பூஜைகளுக்கு பிறகு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அவதாரங்களில் காட்சியளிக்கும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவை படையல் செய்யப்பட்டது. நாடெங்கும் நடைபெற்ற விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை கடலில் கரைக்கும் சடங்குகள் நடைபெறும்.



நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு


விநாயகர் சதுர்த்தியையொட்டி, தெரு முனைகளிலும், சாலைகளின் முக்கிய சந்திப்புகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த விநாயகர் சிலைகளில் தங்களது க்ரியேட்டிவிட்டியை காண்பித்து ஒவ்வொருவரும் ட்ரெண்டிங் விநாயகரை செய்வது வழக்கம். 


தொடர்புடைய செய்திகள்: வீட்டில் மனைவியுடன் பூஜை; மருத்துவர் வராததால் சிறுவன் உயிரிழப்பு: ம.பி.யில் அவலம்


ஆதார் அட்டை வடிவில் பந்தல்


அப்படி இம்முறை புஷ்பா விநாயகர், ஜெயிலர் விநாயகர் என்று பல விநாயகர் சிலயோகள் ட்ரெண்ட் ஆகின. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தயாரித்தவர்கள், விநாயகருக்காக ஒரு பிரத்யேகமான ஆதார் எண்ணையும் உருவாக்கி இணைத்துள்ளனர்.






விநாயகரின் அட்ரஸ்


விநாயகருக்கான ஆதார் அட்டையில் உள்ள தகவலின்படி, அவரது தந்தை பெயர் மகாதேவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகரின் முகவரி, “கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் ஏரி அருகில், கைலாஷ், பின்கோடு - 000 001” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் பிறந்த தேதி ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 01/01/600CE என அதில் எழுதப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் ஆதார் பந்தல் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது. அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் அதனை காண்பதற்கு குவிந்து வருகின்றனர்.