ஒவ்வொரு ஆண்டும் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களுக்கான இந்த ஆண்டு 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்குகிறது. அதன் படி ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.