தமிழ்நாடு:

* மதுரை அருகே ஒரே மாநகராட்சி அரசுப் பள்ளியில் படித்த 4 மாணவிகள், 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகி உள்ளனர்.

* பள்ளி நிர்வாகம் மதம் மாற சொன்னதாக கூறுமாறு ஊருக்குள் வந்து எங்களை சிலர் நிர்பந்திக்கின்றனர். நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம் - மைக்கேல்பட்டி கிராம மக்கள்

* சென்னை பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பை அகற்றும் முடிவை பரிசீலனை செய்யக்கோரி இருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

* விஜய் வழக்கில் அபராத நடவடிக்கையை நிறுத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

* மொழிக்கொள்கை விவகாரத்தில் ஆளுநர் புரியாமல் பேசுகிறார் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

*  தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் மையங்களில் போதிய பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என்றால் அங்கு பயிற்சி மேற்கொள்வதை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

* மதத்தின் பெயரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

இந்தியா:

* கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூராப்பாவின் பேத்தி தற்கொலை

* மகாராஷ்டிராவில் இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது

* தேசிய மாணவர் படையை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் நரேந்திர மோடி தகவல்

உலகம்:

* ஒமிக்ரான் வைரஸைத் தொடர்ந்து தற்போது NeoCov என்ற புதியவகை வைரஸ் பரவுவதாகவும், இதனால் பாதிக்கப்படும் 3 நோயாளிகளில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். * அமெரிக்காவில் 2022இல் முதல் மரண தண்டனை - காதலிக்காக ஹோட்டலில் கொள்ளை அடித்தவருக்கு நிறைவேற்றம்

விளையாட்டு:

* இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மாரடைப்பால் மரணம்

* இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

* ரஞ்சி கோப்பை போட்டிகள் இரு கட்டங்களாக நடத்தப்படும் : பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண