”எந்த மதமாக இருந்தாலும்.. தனிநபருக்கு உரிமை உண்டு..” : அதிரடியாக தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம்..

நாட்டில் மதமாற்றத்திற்கு சட்டப்படி தடையில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Continues below advertisement

வலுக்கட்டாயமாக மத மாற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அஷ்வனி குமார் உபாத்யா தாக்கல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுத்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

Continues below advertisement

இந்த மனுவானது நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு கூட உத்தரவாதம் அளிக்குமா என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். “நாம் ஏன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்பதற்கான தரவுகளை வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்யவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். 


மேலும், கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், பொதுவாக மதமாற்றம் தடைசெய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. “ஒரு தனிநபரின் எந்த மதத்தையும், அவர் பிறந்த மதத்தையும் அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் மதத்தையும் கூறுவது உரிமை. அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சுதந்திரம். நீங்கள் சொல்வது யாரோ கட்டாயப்படுத்தி மதம் மாறுகிறார்கள். யாராவது மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, ​​அது ஒரு தனி பிரச்சினை என்றும் குறிப்பிட்டனர். 

தொடர்ந்து பாஜக தலைவர் அஷ்வனி குமார் உபாத்யாவிடம் கேள்வியெழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் அளித்த மனுவில் எங்கு இதுபோன்று நிகழ்வுகள் நடந்தது என்று குறிப்பிடவில்லை அல்லது  மதமாற்றங்கள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள், புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட யாராவது புகார் அளிக்க முன்வருகிறார்களா என்றும் “இது நடந்தது என்று யாரோ சொல்கிறார்கள். அது நடந்ததா, நடக்காதா, ஏதாவது பதிவு செய்ய வேண்டும். நீங்கள் மூன்று தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்கள்... மீதி உங்கள் அதிருப்திதான்,” என்றும் தெரிவித்தனர். 

மேலும், உபாத்யா தாக்கல் செய்ய மனுவில் மிரட்டல் மற்றும் பரிசுகள் மற்றும் பண பலன்கள் மூலம் மதமாற்றம் செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். இதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்ற நீதிபதிகள் கேள்விக்கு, சமூக ஊடகங்களில் இருந்து தரவுகள் தன்னிடம் இருப்பதாக உபாத்யா சமர்பித்தார். அப்பொழுது நீதிபதிகள், சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை நீதிமன்றம் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வுகளைக் கூட நேற்று நடந்ததாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து விளக்கமளித்த நீதிமன்றம், உபாத்யாயின் நேர்மையைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இந்த வழக்கில் சில அடிப்படை உள்ளது என்பதை முதலில் திருப்திப்படுத்த விரும்புகிறது: “நாங்கள் நோட்டீஸ் அனுப்ப தயாராக இல்லை. நாங்கள் உங்களை விரிவாகக் கேட்கத் தயாராக இருக்கிறோம், பின்னர் அறிவிப்பு தேவையா இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தானாக நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola