ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகர் டெல்லி, ஜம்மு , காஷ்மீர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. 






ஆப்கானிஸ்தானில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 


இதன் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்படுள்ளது. இந்தாண்டில் இரண்டாவது முறையாக டெல்லியில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று டெல்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ப்சியாபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. உயிரிழப்புகள் குறித்தும் எந்த தகவலும் இல்லை. 


படகஸ்தான் (Badakhshan) பகுதியில் சக்தி வாய்ந்த அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் முதலில் பெரிதாக இல்லை என்று ஏதும் செய்யாமல் இருந்துள்ளனர். அதன் பிறகு வீடுகளை விட்டு வெளியேறினர். 30-40 நொடிகளுக்கு நிலநடுக்கம் அதிர்வு உணரப்படுள்ளது. கடந்தாண்டு ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட 6.1 ரிக்டெர் அளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் உயிரிழந்துள்ளனர்.