சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது திருமண புகைப்படங்கள் அல்லது தனது பெற்றோரின் திருமண புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம்.  ஆனால் பெற்றோரின் திருமணத்தை யாரும் நேரில் பார்த்திருக்க முடியாது, அதனை தான் ஒரு பெண் செய்திருக்கிறார்.






தனது தாயிற்கு இரண்டாவது திருமணம் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். @alphaw1fe என்னும் ட்விட்டர் ஐடியில் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டில், அவரது தாய்க்கு திருமணம் செய்து வைத்ததை பெருமிதத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.






அந்த க்யூட்டான போஸ்ட் பலரை கவர்ந்துள்ளது. பலரும் அவரது செயலுக்கு கமெண்டுகளில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  முன்னதாக இருந்த ஒரு கொடுமைக்கார கணவனிடம் இருந்து பிரிந்து வந்து அவர் வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறார் என்றும் அவர் நரகத்திற்குதான் செல்வார் என்றும் பதிவில் தெரிவித்துள்ளார்.






கடந்த நான்கைந்து நாட்களாகவே அவர் இடும் பதிவுகளில் சூழ்ந்துள்ள நெட்டிசன்கள் அவருக்கும் அவர் புதிய தந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.அதனை கொண்டாடும் விதமாக அவர் இட்ட பதிவு இணையவாசிகளின் நெஞ்சை அள்ளியுள்ளது. அவரது தாயின் பெயர் சோனி என்பதால் ஒரு பிரபல இந்தி பாடலான "மேரி சோனி, மேரி தமன்னா" என அவர் கணவர் பாட அவர் ஆடுகிறார் என்று மற்றொரு பதிவில் தெரிவித்தார்.






தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்ட அவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் அணுகுகிறார். அவரது தாயை நடந்து அழைத்து வரும் விடியோ, பின்னர் தாலி கட்டும் வீடியோ என அனைத்தையும் வெளியிட்டு நெகிழ்ந்துள்ளார். அத்தனை விடியோக்களுக்கும் நெட்டிசன்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளின் கீழ் இணையவாசிகள் இரண்டாவது திருமணம் குறித்த அவசியமான விவாதங்களை செய்து வருகின்றனர்.