International Flight Services: 2 வருடங்களுக்கு பிறகு, அனைத்து நாடுகளுக்கும் விமானசேவையை தொடங்கியது இந்தியா!
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கியது. 40 நாடுகளைச் சேர்ந்த 60 விமான நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து விமான சேவை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டன.
விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிய வேண்டியதில்லை போன்ற தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், கிருமி நாசினி அவசியம் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவின்படி, ஞாயிற்றுக்கிழமை (இன்று) முதல் வழக்கமான சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க இந்தியா தயாரான நிலையில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் சர்வதேச அட்டவணையின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கோடை கால அட்டவணை 2022 மார்ச் 27 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 29 வரை அமலில் இருக்கும்.
மொரீஷியஸ், மலேசியா, தாய்லாந்து, துருக்கி, அமெரிக்கா, ஈராக் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த 40 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 60 வெளிநாட்டு விமான நிறுவனங்கள் 2022 கோடை கால அட்டவணையின் போது இந்தியாவிற்கு 1783 அதிர்வெண்களை (frequencies) இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியா சலாம் ஏர், ஏர் அரேபியா அபுதாபி, குவாண்டாஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சில புதிய விமான நிறுவனங்கள் இந்தியாவுடன் விமானச் சேவையைத் தொடங்க உள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்