நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்கு விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 5வது நாளாக இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். 


நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்கு விற்பனை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் ஏற்கெனவே ராகுல்காந்தி 4 நாட்கள் ஆஜராகி விளக்கம் அளித்தார். கிட்டத்தட்ட 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. 


இந்நிலையில் 5வது நாளாக இன்று ராகுல்காந்தி அமலாக்கத்துறையில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். ராகுல்காந்தியை விசாரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.