லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி! சித்தூர் அருகே சோகம்

சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

திருச்சியை சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அப்போது சித்தூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு திருச்சி திரும்பி வந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் படுகாயமடைந்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சமப்வம் இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் படுகாயமடைந்தவகளின் 6 பேர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola