தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு திருப்பதியில் நேற்று நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கிய இந்த விழாவில், தமிழகம் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சால்வை அணிவித்து வரவேற்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:


புதுச்சேரியில் மாநில அந்தஸ்து இல்லாத பிரச்சினையால், புதுச்சேரி அதிக தொழிற்சாலைகளை வரவழைக்கவோ, சுற்றுலாவுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கவோ முடியவில்லை. புதுச்சேரியின் நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கையான மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகத்தின் மத்திய உதவி முற்றிலும் போதுமானதாக இல்லை. உதாரணமாக, நடப்பு பட்ஜெட்டில் 1.57 சதவீதம் அதிகரிப்பு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.


ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், பெட்ரோலிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கவும் அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக 1500 கோடி மத்திய உதவி தேவைப்படுகிறது. புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் 216 ஏக்கர் நிலமும், புதுச்சேரியில் 54 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும். இதற்கு சுமார் 225 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.


’புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை’




தற்போதைய சட்டப்பேரவை கட்டிடம் முற்றிலும் போதுமானதாக இல்லாமல் பழமையானதாகவும் உள்ளது. இங்கு தலைமைச் செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய சட்டப் பேரவை வளாகம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 300 கோடி ரூபாய் மானியம் தேவைப்படும். கொரோனா தொடர்பான செலவினங்களுக்காகவும், மருத்துவ மனைகளில் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவது முற்றிலும் அவசியமானதால் 500 கோடி நிதியுதவி தரவேண்டும் எனவும் முதலமைச்சர் என்.ரங்கசாமி கோரினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர