சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுற்றித்திரியும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


இஸ்ரோ வெளியிட்ட வீடியோ:


இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பாதுகாப்பான முறையில் பயணிப்பதற்கான வழியை ரோவர் தேடிக்கொண்டு இருந்தது. அப்போது அது சுழலும் காட்சிகளை லேண்டர்ல் இருந்த இமேஜர் கேமரா படம்பிடித்துள்ளது.  அந்த காட்சிகளை பார்க்கும்போது நிலவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உற்சகாமாக விளையாடிக்கொண்டு இருப்பதை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. இல்லையா? ” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, ரோவர் பாதுகாப்பான வழியை தேடி சுழல்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோவவும் வெளியிடப்பட்டுள்ளது.



சந்திரயான் 3:


இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் பயணம் செய்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 5வது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. தொடர்ந்து, லேண்டரில் இருந்து களமிறங்கிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் பயணம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 


புதிய கனிமங்கள்& வாயுக்கள்:


அதன்படி, நிலவில் கந்தகம் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. நிலவில் கனிமம் இருப்பதை, ரோவரில் அனுப்பப்பட்ட லேசர் இன்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி கண்டுபிடித்துள்ளது. அதேபோல, எதிர்பார்த்தபடியே, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான், ஆக்ஸிஜன் உள்ளிட்ட வேதியியல் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடந்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில், தி ஆல்பா பார்டிக்கல் எக்ஸ்.ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (’The Alpha Particle X-ray Spectroscope (APXS)) என்ற தொழில்நுட்பம் மூலம் ‘கந்தகம்’ இருப்பதை ரோவர் லேண்டர் மீண்டும் உறுதி செய்துள்ளது. ’Hinge’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோவரில் உள்ள கருவி ஆராய்ச்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.