Breaking News LIVE: அரசுப் பேருந்து கார் மோதி விபத்து - 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 25 Jun 2023 05:36 PM
மணப்பாறை அருகே விபத்து...கார் மீது மோதிய அரசு பேருந்து..5 பேர் உயிரிழப்பு..!

திருச்சி மணப்பாறை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கல்கொத்தனூரில் அரசு பேருந்தும் காரும் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்து கல்கொத்தனூரில் கார் மீது மோதியது. கார் மீது மோதிய அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறை விளக்கம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் போது, சட்டத்தை மீறவில்லை என அமலாக்கத்துறை சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. 

லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட பணியாளர் உயிரிழப்பு..!

ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டல் லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட ஊழியர் உயிரிழந்துள்ளார். 

வி.பி. சிங்கிற்கு சிலை..!

இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த வி.பி.சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரியில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எகிப்து அதிபரை சந்தித்த பிரதமர் மோடி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தாவை சந்தித்தார் பிரதமர் மோடி

Breaking News LIVE: மேற்கு வங்க ஆளுநர் - மாநில தேர்தல் ஆணையர் சந்திப்பு!

உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மேற்கு வங்க ஆளுநரை சந்திக்கிறார் தேர்தல் ஆணையர். அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸை சந்தித்து விளக்கமளிக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ் சின்ஹா. 

Breaking News LIVE:பழனி கோயில் இணையதள பிரச்சனை - பக்தர்கள் ஏமாற்றம்

பழனி கோயில் இணையதள பிரச்சனையால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவதி.. சரவண பொய்கை மொட்டை அடிக்கும் இடத்தில் இலவச டிக்கெட் பெறுவதற்கான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு. 

Breaking News LIVE: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார் . வி.பி.சிங்கின் மரபு, நமது தலைவர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆன்மாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது, ஏனெனில் அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்ற பொதுவான இலக்கைப் கொண்டிருந்தனர். அவரது எண்ணங்கள் ஒளிமயமான மற்றும் சமமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்” என தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: மேற்கு வங்க மாநிலத்தில் 2  சரக்கு ரயில்கள் மோதி விபத்து

மேற்கு வங்க மாநிலம் ஓண்டா நிலையத்தில் முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பின்னால் வந்து ரயில் மோதிய சம்பவத்தில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். 12 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Breaking News LIVE: அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் 400 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.





உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 400வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.