Breaking News LIVE: திருவண்ணாமலையில் அமைகிறது ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 12 May 2023 05:53 PM
Breaking News LIVE: திருவண்ணாமலையில் அமைகிறது ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளதாக அறிவிப்பு - ரூ.1000 கோடி முதலீட்டில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலை அமைய உள்ளதாக தொழில்துறை தகவல் 

Breaking News LIVE; மே 20ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம்

மே 20ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மொழியை வைத்து தனித்தனியாக பிரிந்துள்ளோம் - ஆளுநர்

”ஆங்கிலேயர்கள் வெளியேற்றத்திற்கு  பின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பின் நடந்த அரசியலால்  நாம் தனித்தனியாக மொழியை வைத்து பிரிந்துள்ளோம்” என ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த மழை.. அதிகபட்சமாக மூலனூர், தல்லாகுளத்தில் 6 செ.மீ மழை பதிவு..

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக  மூலனூர் (திருப்பூர் மாவட்டம்), தல்லாகுளம் (மதுரை மாவட்டம்) 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

ராகுல் காந்தி வழக்கு - நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு..

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. பழைய பதவியிலேயே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

சென்னையில் முடிவுற்ற 34 திட்டப்பணிகள் தொடக்கம்..

சென்னையில் மாநகராட்சியில் ரூ. 35.7 கோடியில் முடிவுற்ற 34 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 சீர்மிகு பள்ளி கட்டமைப்புகள், 20 பூங்காக்கள், 5 விளையாட்டு திடல்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார்.

வெளியான பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள்..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. இதை மாணவர்களும் பெற்றோர்களும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்து பார்க்கலாம்.  

அண்ணாமலைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு..

அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை  அண்ணாமலை கூறியதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர்  அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல் பிடுங்கிய ஏ.எஸ்.பி. விவகாரம்; 24 போலீசார் பணியிட மாற்றம்

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 24 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Background

சென்னையில் தொடர்ந்து மாற்றமின்றி  விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.12) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 356ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.