தமிழ்நட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்து, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து, 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் உயர்மட்டக் குழுவிற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உததரவிட்டுள்ளது.

Continues below advertisement

கட்டண உயர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்

இந்த விவகாரத்தில், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்த உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில் உயர்மட்டக்குழுவை நியமிக்கக் கோரியும், தனியார பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதில், 2018-ம் ஆண்டு பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது, டீசல் விலை லிட்டர் ரூ.63-ஆக இருந்ததாகவும், தற்போது டீசர் விலை லிட்டர் ரூ.92-க்கு விற்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 1 ரூபாய் 10 காசுகளும், கர்நாடகாவில் 1 ரூபாயும், ஆந்திராவில் 1 ரூபாய் 8 காசுகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வெறும் 58 காசுகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பேருந்து கட்டணத்தை உயர்த்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. 

Continues below advertisement

உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்ததபோது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறைச் செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர்கள், நிதித்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும் எனவும், உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.

இதையடுத்து, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கருத்துகளை கோருவதுடன், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு தமிழக அரசின் உயர்மட்டக்குழு, 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.