Breaking News LIVE: காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு - காங்கிரஸ்
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸில் சேர பிரஷாந்த் கிஷோர் மறுப்பு - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவர்களை ராகிங் செய்த 5 மாணவர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை
6 - 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்
ஜெயலலிதா மரணத்தில் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாக ஆறுமுகசாமி ஆணையம் தகவல் அளித்துள்ளது.
2018ம் ஆண்டு சேலம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக தலையை துண்டித்து கொன்ற கொடூரன் தினேஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிடமாற்றம். புதிய நீதிபதியாக முருகன் நியமனம்.
சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கையெழுத்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் நூல்களை வழங்குகிறார் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் சங்கத்தமிழன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 1399 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என வி.கே.சசிகலா சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் கூறினார்.
டுவிட்டர் தளத்தை ஒட்டுமொத்தமாக 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்தார். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த டீல் ஓகே செய்யப்பட்டது. இதனால் விரைவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
Background
உலக பணக்காரர்கள் வரிசையில் அடிக்கடி சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தற்போது உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது. இம்முறை உலகளவில் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர் தொழிலதிபர் அதானி இடம்பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 5-ஆம் இடத்தில் இருந்த வாரன் பஃப்ஃபட்டை அதானி பின்னுக்கு தள்ளியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி கௌதம் அதானியின் மொத்த சொத்த மதிப்பு 123 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது வாரென் பஃப்ஃபட்டின் சொத்து மதிப்பான 121.7 பில்லியன் டாலர்களைவிட அதிகமாகியுள்ளது. இதன்காரணமாக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 5-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று கருதப்படுகிறது.
ப்ளூம்பெர்க் மில்லியனர்கள் அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் தற்போது வரை அதானி 43 பில்லியன் டாலர் சொத்தை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அவருடைய சொத்து மதிப்பில் சுமார் 56% உயர்வை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -