Breaking News LIVE: சரத்பவார் ராஜினாமாவை ஏற்க தொண்டர்கள் மறுப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 02 May 2023 01:43 PM
Breaking News LIVE: சரத்பவார் ராஜினாமாவை ஏற்க தொண்டர்கள் மறுப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் திடீர் அறிவிப்பு... இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அரசியல், சமூக பணிகளில் ஈடுபடுவேன் என அறிக்கை - சரத்வாரே தலைவராக தொடர வேண்டுமென தொண்டர்கள் முழக்கம் 

Breaking News LIVE : தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத்பவார் விலகல்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE : இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : மே 7,8-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் மே 7,8-ஆம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது

தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரம் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE : நீலகிரி, ஈரோடு, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Breaking News LIVE : வேங்கைவயலில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

புதுக்கோட்டை இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் நேரடி விசாரணை நடத்தினர்.

Breaking News LIVE : கோடை மழை 78% கூடுதலாக பெய்துள்ளது

தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை 78 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE : மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னை நிரஞ்சான தேர்வு

மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வாகி உள்ளார்.

Breaking News LIVE : சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழும இடங்களில் ஐ.டி.சோதனை

சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் தொடர்புடைய 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : தி கேரள ஸ்டோரிக்கு எதிர்ப்பு - உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சர்ச்சைக்குள்ளான 'தி கேரள ஸ்டாரி’ படத்துக்கு எதிரான மனுவை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Breaking News LIVE: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது - தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் 

Breaking News LIVE: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள்

  • முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்

  • வேலை வாய்ப்பில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் - டிப்ளமோ இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 (2 ஆண்டுகளுக்கு) வழங்கப்படும்

Breaking News LIVE : அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் - காங்கிரஸ்

கர்நாடக அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகள் அறிவிப்பு 

Breaking News LIVE : கர்நாடக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கர்நாடக தேர்தல் வாக்குறுதி அளித்தது காங்கிரஸ்.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 44,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Breaking News LIVE: புதுச்சேரியில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழந்துள்ளது - அங்கு அதிகப்பட்சமாக பாகூரில் 17 செ.மீ.,  பத்துக்கண்ணுவில் 12 செ.மீ., புதுச்சேரி நகரில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

Breaking News LIVE: கும்பக்கரை அருவியில் 5வது நாளாக குளிக்கத் தடை

வெள்ளப்பெருக்கு காரணமாக தேனி கும்பக்கரை அருவியில் 5வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை - பெரியகுளம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு 

Breaking News LIVE: மதுரை சித்திரை திருவிழா: கோலாகலமாக நடந்த மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் இசைக்க, வைரக்கல் பதித்த திருமாங்கல்யம் மீனாட்சியம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. 

Breaking News LIVE: சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி - ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி - அதேசமயம் காலை 7 மணி முதல் 12 மணி  வரை மட்டுமே மலை ஏற அனுமதி ; மழை பெய்தால் தடை விதிக்கப்படும் என நிபந்தனை 

Breaking News LIVE: முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.2) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 346ஆவது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.





இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.