Breaking LIVE: வலுக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டம் - ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச வருகை!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 30 May 2023 06:23 PM
Breaking LIVE: வலுக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டம் - ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீச வருகை!

ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா வருகை புரிந்துள்ளனர். ஹரித்வாரில் உள்ள கங்கை ஆற்றில் பதக்கங்களை வீசப்போவதாக வீரர்கள் அறிவித்திருந்தனர்.  இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ.ஜ. எம்.பி,.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் வலுத்துள்ளது. 

Breaking News LIVE : அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரருக்கு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று ஆஜராக உத்தரவிட்டு அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 

மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு தள்ளுபடி...

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பதிவு செய்த வழக்கில் ஜாமின் கேட்டிருந்த நிலையில் அதனை தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் மணீஷ் சிசோடியாவுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் சாட்சிகள் கலைக்க  வாய்ப்புள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூரில் நாயை கத்தியால் குத்திய 3 பேர் கைது..

திருவள்ளூர் அடுத்து மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் புவனேஸ்வர் என்பவரின் நாயை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாயை கொன்ற சங்கர் (23), பிரபாகரன் (22), ரோஹித் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் ஒப்பந்ததார் வீட்டில் சோதனை

ஏ1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தார்

கோவையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு

கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி  அளவில் நிறைவு

ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..

சென்னை கிண்டியில் இருக்கும் பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15 ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னைக்கு வருகை தருகிறார். ஜூன் 5 ஆம் தேதி குடியரசு தலைவர் திறந்து வைக்க இருந்த நிலையில் தற்போது 15 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.30) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 374 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.