Breaking News LIVE: இனி 5 வயது வரை பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்லலாம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 24 May 2023 09:47 PM
Breaking News LIVE: இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்சர் அளவில் 6 ஆக உயர்வு

Breaking News LIVE: தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு படிப்பூதியத்தை உயர்த்திட புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்!

புதுச்சேரியில் அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு படிப்பூதியத்தை உயர்த்தி தர ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்பதல் அளித்துள்ளார். 

Breaking News LIVE: தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு படிப்பூதியத்தை உயர்த்திட புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல்!

புதுச்சேரியில் அரசு தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு படிப்பூதியத்தை உயர்த்தி தர ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்பதல் அளித்துள்ளார். 

Breaking News LIVE: லீ குவான் யு - விற்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம்!

சிங்கப்பூர் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யு-விற்கு தம்ழிநாட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் தமிழர் அமைப்புகள் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: ”உலகத் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது திராவிட இயக்கம்.” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கதால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது என சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

Breaking News LIVE: ஈரோட்டில் சதமடித்த வெயில்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Breaking News LIVE: சிங்கப்பூர் நிருவனக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஐ.டி.இ கல்வி நிறுவனம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

Breaking News LIVE:நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி

மே 28-ல் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு திறப்பு நிகழ்ச்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE: தமிழ்நாட்டில் ரூ.312 கோடி முதலீடு செய்யும் சிங்கபூர் Hi-P நிறுவனம்

சிங்கபூரை சேர்ந்த மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.312 கோடி முதலீடு செய்துள்ளது.

Breaking News LIVE: உயர்நிதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி பணி ஓய்வு பெற்றார்

 2022  சென்னை உயர்நிதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி பணி  நியமிக்கப்பட்ட ராஜா பணி ஓய்வு பெற்றார்

Breaking News LIVE: விஷ சாராயம்- 2 கொலை வழக்குகள் பதிவு

சித்தாமூர், அச்சரப்பாக்கத்தில் விஷ சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி இரண்டு கொலை வழக்குகளை பதிவு செய்தது. 

Breaking News LIVE: பைக் மீது டிப்பர் லாரி மோதி தந்தை மகன் பலி

புதுகோட்ட விராலிமலை பைக் மீது டிப்பர் லாரி மோதி தந்தை மகன் ஆகிய இருவர் பலி

Breaking News LIVE:ஆடலும் பாடலும் நிகழ்ச்சி.....காவல்துறைக்குப் புது உத்தரவு

ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் ஏழு நாட்களுக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றும் 7 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்காப்பட்டால் அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பேட்டி.

கடந்த ஆட்சியில் நெசவு தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாமல் இருந்தார்கள் திமுக ஆட்சி வந்த உடன் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என பேசியுள்ளார் அமைச்சர் காந்தி

Breaking News LIVE:குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை ரத்து

குடியசுத்தலைவர் திரெளபதி முர்மு வரும் 5-ஆம் தேதி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வதால், கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News LIVE : கேரள முதல்வருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கேரளாவில் வெற்றிக்கதையை வடிவமைக்கும் பினராயி விஜயன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: இபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து அவதூறு பரப்புவதா என இபிஎஸ்-க்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: ஜூன் 18-ல் நடிகர் விஜய் மாணவர்களுடன் ஆலோசனை?

ஜூன் 18-ஆம் தேதி திருச்சியில் மாணவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த திட்டம் என தகவல். 

ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்தது.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 45,320-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ.5,665-க்கு விற்பனையாகிறது.  24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,131 ரூபாயாகவும், ஒரு சவரன் ரூ. 49, 072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


வெள்ளி விலை: 


அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் 50 காசுகள் குறைந்து ரூ.77.50 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.77,500-க்கு விற்பனையாகிறது.

5 வயது வரை பேருந்தில் கட்டணமில்லை - தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 3 வயது வரை கட்டணமில்லை என இருந்த நிலையில் தற்போது 5 வயது வரை கட்டணமில்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி கட்டணம் என்றும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு.. பாதிப்பு என்ன?

இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,059 பேர் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,44,49,451 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,591 ஆக குறைந்துள்ளது.

திருவள்ளூர்: வட சென்னையில் மின் உற்பத்தி தொடங்கியது -

திருவள்ளூர்: வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு 810 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 வது நிலையில் 2வது அலகில் 210, 2வது நிலையில் 1வது அலகில் 600 என மொத்தம் 810 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கியது

மது குடித்து இருவர் உயிரிழப்பு - தொடரும் விசாரணை

தஞ்சை: அரசு மதுபான கூடத்தில் மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மதுவில் சயனைடு கலந்து இருந்தது தொடர்பாக கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் காவல் திறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

மே 31 ஆம் தேதிக்குள் விசை படகுகள் கரை திரும்ப ஆட்சியர் உத்தரவு..

மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி மே 31க்குள் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்ப குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு கடல் பகுதிகளில் மே 31 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Background

Petrol, Diesel Price: சென்னையில் மாற்றமின்றி ஓர் ஆண்டை கடந்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம்.


எரிபொருளின் அவசியம் 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.24) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 368 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.