Breaking News LIVE: மது குடித்து 2 பேர் உயிரிழப்பு - டாஸ்மாக் பாருக்கு சீல்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 21 May 2023 09:32 PM
மது குடித்து 2 பேர் உயிரிழப்பு - டாஸ்மாக் பாருக்கு சீல்

பாரில் மது குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சையில் டாஸ்மாக் பாருக்கு சீல் வைத்து வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. 

Breaking News LIVE: ஜூலை 12 ஆம் தேதி சந்திராயன்- 3 ஏவுகலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி சந்திராயன்- 3 ஏவுகலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்த ஏவுகலம் நிலவின் தெற்கு பகுதியை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது

Breaking News LIVE: மதுபானம் குடித்து மேலும் ஒருவர் பலி

தஞ்சை அரசு  மதுபானக் கடையில் மது குடித்து முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த விவேக் என்பவரும் உயிரிழந்துள்ளார்

Breaking News LIVE: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு - தமிழ்நாட்டில் கள்ளச்சாரயத்தை ஒழிக்கவும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கக்கோரிய விவகாரத்தை நேரடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்தனர். 

Breaking News LIVE: ஏற்காட்டில் கோடை விழா இன்று தொடக்கம் - குவியும் சுற்றுலாப்பயணிகள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது - கண்காட்சியை அண்ணா பூங்காவில் அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் மாலை 5 மணிக்கு  தொடங்கி வைக்கின்றனர். 

Breaking News LIVE:மதுராந்தகம் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் 

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் விஷச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்த விவாகரத்தில் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - புதிய டிஎஸ்பியாக சிவசக்தி நியமனம் 

Breaking News LIVE: திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து வழிபடும் பக்தர்கள் 

கோடை விடுமுறையால் திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நேற்று ஒரே நாளில் 82,297 பக்தர்கள் வழிபட்ட நிலையில், ரூ.3.71 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Background

சென்னையில் மாற்றமின்றி ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம்.


எரிபொருளின் அவசியம் 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.21) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு ஓராண்டை நிறைவு செய்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.