Breaking Live: கலாஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது - உயர்நீதிமன்றம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

Continues below advertisement

Background

Petrol Diesel Price Today, February 22: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.

பெட்ரோல், டீசல்:

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 22ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 642வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.

அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய உயிரி எரிபொருள் கொள்கை

கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.

இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 

நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 

இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

Continues below advertisement
16:52 PM (IST)  •  22 Feb 2024

கலாஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது - உயர்நீதிமன்றம்

கலோஷேத்ரம் கொடும் பழிக்கு ஆளாகியுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15:53 PM (IST)  •  22 Feb 2024

ஒடிசா முதலமைச்சருக்கு நெருக்கமான வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீச்சு

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் மீது தக்காளி வீசப்பட்டுள்ளது.

14:08 PM (IST)  •  22 Feb 2024

Breaking Live: தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது..

பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவையில் 19 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. முதலமைச்சரின் பதிலுரை முடிந்து சட்டப்பேரவை நிறைவுபெற்று, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

12:41 PM (IST)  •  22 Feb 2024

Breaking Live: சாதிவாரி கணக்கெடுப்பு.. அதிமுகவை தொடர்ந்து பாமக வெளிநடப்பு..

சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பேசும் போது அதிமுகவை தொடர்ந்து பாமகவும் வெளிநடப்பு செய்தது. 

12:08 PM (IST)  •  22 Feb 2024

Breaking Live: உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு செயலி - தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தகவல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி செயலி ஏற்பாடு செய்யப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

12:02 PM (IST)  •  22 Feb 2024

Breaking Live: மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு - துரைமுருகன் பதில்

மேகதாதுவில் ஒருபோதும் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார்.

11:53 AM (IST)  •  22 Feb 2024

ED Notice to Byjus Raveendran : பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது அமலாக்கத்துறை

ED Notice to Byjus Raveendran : பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது அமலாக்கத்துறை





11:15 AM (IST)  •  22 Feb 2024

Breaking Live: புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் - சட்டப்பேரவை ஒத்திவைப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவையில்  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிர்ஸ், திமுக கட்சிகள் வெளிநடப்பு செய்தது. 

10:52 AM (IST)  •  22 Feb 2024

Breaking Live: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. மாநில அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் அவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகவில்லை. 

10:36 AM (IST)  •  22 Feb 2024

Breaking Live: திருச்செந்தூர் கடற்கரையில் மரப்பாதை வசதி - இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு

திருச்செந்தூர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக மரப்பாலம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

10:26 AM (IST)  •  22 Feb 2024

Breaking Live: பிப்ரவரி 26ல் கலைஞர் நினைவிடம் திறப்பு - சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். 

08:23 AM (IST)  •  22 Feb 2024

தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். தொடர்ந்து, நாளை காலை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். 

Sponsored Links by Taboola