Breaking News LIVE: நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின்

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ஜான்சி ராணி Last Updated: 28 Aug 2023 08:39 PM
நாட்டு மக்களுக்கு ஆளுநர் ரவி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓணம் திருநாளில் , நம் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். மகாபலி நமக்கு அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் அளித்து,  நம் அனைவரையும் மகிழ்ச்சியான குடும்பம் போல் வாழ வைக்கட்டும் என தனது வாழ்த்துக் குறிப்பில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE: நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட ரூ.3 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக ரூ.3 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Breaking News LIVE: காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் - தமிழ்நாடு அதிகாரிகள் பங்கேற்பு

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கபப்டும் முடிவு இன்று மாலையே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 

Breaking News LIVE: தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

"உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். வரலாறு படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.உங்களின் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனை மூலம் இந்திய விளையாட்டுகள் உலகளவில் அங்கீகாரம் பெறட்டும். "என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



Breaking News LIVE: தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் சராசரி ரூ.98.374 ஆக உள்ள நிலையில்,  ரூ1,66,727 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு


 
Breaking News LIVE: நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி



Breaking News LIVE: நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் (52) காலமானார்



Breaking News LIVE: கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை - 7 மாதங்கள் ரயில்சேவை ரத்து

சென்னை கடற்கரை எழும்பூர் வரை 4-வது வழித்தடம் விரிவாக்கப் பணிகள் காரணமாக 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரை சிந்தாதிர்ப்பேடை இடையே பறக்கும் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 

Breaking News LIVE: 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Breaking News LIVE: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

 சென்னையில் இன்று (ஆகஸ்ட் ,28,2023) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Breaking News LIVE: நீரஜ் சோப்ரா புதிய சாதனை

உலக தடகள சாம்பியன்ஷ்ப் தொடரின் ஈட்டில் எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, மூன்றாவது சுற்றில்  86.32 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 15 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 464வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025-ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.




 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.