பெஸ்காம் எனப்படும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பெங்களூருவில் இன்றும் நாளையும் மிகப்பெரிய மின் தடையை அறிவித்துள்ளது.

Continues below advertisement

இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் சில கிராமங்களில் 7 மணி நேரத்துக்கு மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. குடி மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் சந்தாபூர் பிரிவு உட்பட்ட முக்கிய பகுதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

எங்கெல்லாம் மின் தடை?

தரபனஹள்ளி, ஹுருளிச்சிக்கனஹள்ளி, டிபி கிராஸ், ஹெசரகட்டா, பிலிஜாஜி துவாரகா நகர், சிக்கபனவரா, மாருதி நகர், கணபதி நகர், கிருஷ்ணா காலேஜ் சாலை, ராகவேந்திரா லேஅவுட், பஜ்ஜப்பா லேஅவுட், சிவகுமாரஸ்வாமிஜி லேஅவுட், தாசேனஹள்ளி, ஹோசஹல்லி, அக்ரானிஷாரா ஃபார்ம் பால்யா, அக்ரானிஷாரா ஃபார்ம் பால்யா சோமஷெட்டி ஹள்ளி, கனிகரஹள்ளி, பைப்லைன் ரோடு, ஐஐஎச்ஆர், மடப்பனஹள்ளி, காலேனஹள்ளி, மாவல்லிபுரா, கொண்டஷெட்டிஹள்ளி, குருபரஹள்ளி, கும்பரஹள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் நாளை மின் தடை செய்யப்படவுள்ளது

என்ன செய்ய வேண்டும்?

  • மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.
  • மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.
  • மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.
  • பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.