பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பெங்களூரு நகரில் இன்று (13-12-2025) மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
எவ்வளவு நேரம் மின்வெட்டு?
பணிகள் திட்டமிட்டபடி முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். அப்பகுதியில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்து 1 முதல் 5 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படலாம்.
எந்த பகுதியில் மின் தடை?
எலஹங்கா துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பின்வரும் இடங்களில் மின் வினியோகம் இருக்காது. ஏலஹங்கா எம்.யூ.எஸ்.எஸ், கே.எம்.எஃப், மதர் டெய்ரி, எஸ்.எஃப்.எஸ் 208 மற்றும் எஸ்.எஃப்.எஸ் 407, உன்னிகிருஷ்ணன் ரோடு, பி செக்டர் ,என்.இ.எஸ் ரோடு, சி.எம். என்கிளேவ், மாத்ரு லேஅவுட், சோமேஸ்வரநகர், கனகநகர், ஜூடிசியல் லேஅவுட், ஏலஹங்கா ஓல்டு டவுன்.
காந்தி நகர், பிபிஎம்பி ரோடு (ஓல்டு டவுன் மற்றும் கோடி ரோடு), கரே, ஆர்.எம்.இசட் மால், ஆர்.எம்.இசட் ரெசிடென்ஷியல், பூர்வாங்கரா அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்று 7 மணி நேரம் மின் தடை அமலில் இருக்கும்,
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்
கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.