இந்த படம் வடசென்னை (North Chennai) பகுதியில் வசிக்கும் மக்களின் முக்கிய முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டை பற்றிய சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப் படம் வெளியாகுவதற்கு முன்பாகவே ஆர்யாவின் குத்துச்சண்டை பயிற்சி வீடியோவும் மிகவும் வைரலானது. மேலும், ஆர்யாவின் கட்டுக்கட்டாக இருந்த உடலமைப்பை பார்த்து ரசிகர்கள் பிரமித்தனர்.


2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) படம் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் COVID-19 தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு  காரணமாக அமேசான் OTT இல் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது கதாப்பாத்திரத்திற்காக எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுப்பவர் ஆர்யா. மேலும் அவர் பிட்னஸ் ஃபிரீக் என்று கூட சொல்லலாம். சார்பட்டா திரைப்படத்திற்காக எப்படி உடம்பை செதுக்கி வைத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். இத்திரை படத்திற்கு முன்பே ஆர்யா சைக்கிள் ஓட்டியும், டையட்டுக்கான அளவுமிக்க உணவையும் எடுத்து வருபவர்.


ஆர்யா சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர், இந்த நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர் பவன் குமாரின் உடற்பயிற்சி வீடியோ ஒன்றை ரீடிவிட் செய்து, “எனது கனவு” என்று பதிவிட்டு உள்ளார் நடிகர் ஆரியா.


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dream 😍😍😍😍💪💪💪 <a >#IndianArmy</a> <a >https://t.co/BzYwzkvDBL</a></p>&mdash; Arya (@arya_offl) <a >January 5, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (JNU) பட்டம் பெற்றவர்.



பவன் குமார் ஜனவரி 15, 1993 இல் பிறந்தார், அப்போது இந்திய இராணுவ தின நாள் என்பதால் ராணுவ வீரராகுவதில் முனைப்புடன் இருந்து டிசம்பர் 14, 2013 அன்று வெற்றிகரமாக ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார்.


வீரர் பவன் குமார் ஒரு உறுதியான துணிச்சல்மிக்க அதிகாரியாவார், கேப்டன் பவன் குமாரின் தைரியம், போர் குணம் மற்றும் மிக பெரிய தியாகத்திற்காக 15 ஆகஸ்ட் 2016 அன்று "சௌர்ய சக்ரா" என்ற வீர விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.