நவம்பர் 7ம் தேதி முதல் நடைபெறவுள்ள ராணுவ தலைமை தளபதிகளில் உச்சி மாநாட்டில், சீன எல்லை, இலங்கை எல்லை விவகாரங்கள் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


ராணுவத் தலைமைத் தளபதிகள் உச்சிமாநாடு:


இந்திய ராணுவத்திற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதில் முக்கிய அங்கம் வகிக்கும் வகையிலான விசயங்களை விவாதிக்கும் ராணுவத் தலைமைத் தளபதிகளின் உச்சிமாநாடு ஆண்டுதோறும் இரு முறை நடைபெறுகிறது.




அந்த வகையில் இந்தாண்டுக்கான இரண்டாவது உச்சிமாநாடு புதுதில்லியில் வரும் 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் ராணுவத் தலைமைத் தளபதிகள், இதர உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


இந்த மாநாடு, ராணுவ விவகாரங்கள் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளோடு இந்திய ராணுவத்தின் மூத்த தலைவர்கள் கலந்துரையாடுவதற்கான மன்றமாகவும் திகழும்.


ஆலோசனை:



  • தற்போதைய/ வளர்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அம்சங்கள் பற்றி இந்திய ராணுவத்தின் முக்கிய தலைவர்கள் மாநாட்டின் போது ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.

  • இந்திய ராணுவத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் விவாதிப்பார்கள்.

  • எதிர்கால தேவைகள், திறன் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலில் முன்னேற்றம், இந்திய ராணுவத்தின் மேம்பட்ட செயல்பாட்டுத் திறனுக்கானத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும்

  • தற்சார்பு இந்தியாவை ஊக்குவிப்பது தொடர்பான மாற்றங்கள் 

  • புதிய மனிதவள மேம்பாட்டு கொள்கையின் அமலாக்கம் மற்றும்

  • முற்போக்கு ராணுவ பயிற்சியின் எதிர்கால சவால்கள்க போன்ற விஷயங்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.




அயல்நாட்டு உறவுகள்:


மேலும், தற்கால இந்திய- சீன உறவுகள் குறித்தும், இந்திய-இலங்கை உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.


இதையடுத்து, தேசிய பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப சவால்கள் ஆகிய தலைப்புகளில் நிபுணர்களின் சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இம்மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முக்கிய உரை:


இம்மாநாட்டின் நவம்பர் 10-ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைத் தளபதிகளுடன் கலந்துரையாடவிருக்கிறார். 




இதையடுத்து, ராணுவத் தலைமைத் தளபதி, இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் தலைமை தளபதிகளும் உரையாற்றுவார்கள். ஆகையால், இம்மாநாட்டில், கடுமையான காலங்களில் முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


பாதுகாப்பு துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டமானது, இந்தியாவில் மட்டுமன்றி அண்டை நாடுகளிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Also Read: Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!