பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக  நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.


பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக  நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.


 






 


மேலும், பஞ்சாப் காங்கிரஸ் செயல் தலைவர்களாக சங்கத் சிங் கில்ஸியான், சுக்விந்தர் சின் டேனி நியமிக்கப்பட்டுள்ளனர். பவன் கோயல், குல்ஜித் சிங் நாக்ரா ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமித்து சோனியாகாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் பிரியங்கா காந்தி : திட்டம் என்ன?