ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார் ரமேஷுக்கு, அந்த மிகப்பெரிய துயரத்திலிருந்து மீள்வது ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது. மேலும் உயிர் பிழைத்த துக்கமே அவரை உடைத்துவிட்டது என அவரின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

அகமதாபாத் விமான விபத்து

 கடந்த  ஜூன் மாதம் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன்  புறப்பட்ட ஏர் இந்தியா விமான  விபத்தில் சிக்கியது. இதில் பயணம் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். லண்டனில் வசிக்கும் ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்  அஜய் இருவரும் அந்த விமானத்தில் இருந்தனர். இந்த கோர விபத்தில் ரமேஷ் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.  விமானம் விபத்துக்குள்ளாகி மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், அவசர வெளியேறும் இடம் அருகிலிருந்ததால் ரமேஷ் தான் அமர்ந்திருந்த 11A இருக்கையிலிருந்து தானாக வெளியேற முடிந்தது. வெளியே வந்ததும், தனது சகோதரை ரமேஷ் தேடி திரிந்தாராம். ஆனால் அவர் உயிருடன் இல்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

உளவியல் ரீதியாக பாதிப்பு:

இந்த அனுபவம் ரமேஷை உளவியல் ரீதியாக சிதைத்துவிட்டது. அவரது உறவினர் சன்னி, பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில், “அவரது சகோதரரின் மரணம், அந்த இடத்தில் கண்ட கொடூர காட்சிகள் – இவை எல்லாம் இன்னும் அவரை மிகவும் பாதித்து மன உலைச்சலுக்கு ஆளாக்கு உள்ளது.  பலர் அவரை தொடர்பு கொள்ள முயலுகிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் உறவுகள் போன் செய்கிறார்கள். ஆனால் அவர் யாருடனும் பேசுவதில்லை. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நள்ளிரவில் எழுந்துவிட்டு தூங்க முடியாமல் தவிக்கிறார்” என்று கூறினார்.

மனநல ஆலோசனை தேவைப்படுமென்று உணர்ந்த அவரது குடும்பம், சமீபத்தில் ஒரு உளவியலாளரிடம் அவரை அழைத்துச் சென்றது. தற்போது ரமேஷ் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். ஆனால் லண்டனுக்குத் திரும்ப சென்று அங்கு என்ன செய்வது என்று கூட அவர் முடிவெடுக்கவில்லை என்கிறார் சன்னி.

மனமுடைந்த ரமேஷ்

ஜூன் 17 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரமேஷ், தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அங்கு அவர் உடைந்து அழுததையும், மிகவும் மன உளைச்சலில் சிக்கியிருந்ததையும் உறவினர்கள் கூறுகிறார்கள்.

உயிர் பிழைத்ததாலே வருகிற ஒவ்வொரு நாளும் ஒரு சுமையாகவே அவருக்கு மாறியுள்ளது. சிகிச்சையின் வழியாக அந்த சுமையை இறுக்காமல் சீராக அடக்க முடியுமா என்பது, இனி காலமே பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது