மகாராஷ்டிராவில் பொட்டு அணியாத பெண் பத்திரிகையாளரிடம் சம்பாஜி பிடே என்னும் செயற்பாட்டாளர் பேட்டியளிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் பிடேவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.  சம்பாஜி பிடே பெண் பத்திரிக்கையாளரிடம் பேச மறுத்துவிட்டார், மேலும் அவர் "விதவை" போல் தோன்றுவதைத் தவிர்க்க பொட்டு அணிய வேண்டும் என்றும் பெண்கள் பாரத மாதாவைப் போன்றவர்கள் என்றும் பத்திரிகையாளரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


தெற்கு மும்பையில் உள்ள மாநில தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த பிறகு, இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு காணொளியில், பெண் நிருபரை தன்னை அணுகுவதற்கு முன் பொட்டு அணியுமாறு பிடே அறிவுறுத்தியுள்ளார்.


அவர் தன்னிடம் கேள்வி கேட்ட பெண்  நிருபரிடம் பேச மறுத்துவிட்டார், மேலும் அவர் "விதவை" போல தோற்றமளிக்காமல் இருக்க பொட்டு அணிய வேண்டும் என்றும் பெண்கள் பாரத மாதா போன்றவர்கள் என்றும் பத்திரிகையாளரிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர், பிடேவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.


பின்னர், அந்த பெண் பத்திரிக்கையாளர்  ”பொட்டு அணிவது அல்லது அணியாமல் இருப்பது அவரவர் சுதந்திரம் என்று கூறினார். பொட்டு அணியலாமா, எப்போது அணிய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய எனக்கு உரிமை உள்ளது. நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம், மக்கள் வயதானவர்களுக்கு மரியாதை கொடுத்து மிகவும் மதிக்கத்தக்கவராக கருதுகிறோம், ஆனால் அந்த நபரும் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்”.என்று அவர் ஒரு ட்வீட்டில் எழுதினார்.




மேலும் இந்த ட்வீட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலரும் இந்த ட்வீடிற்கு பதிலளிக்கும் விதத்தில் பெண் நிருபருக்கு ஆதரவாக பிடேவை சரமாரி கேள்வி கேட்டு வருகின்றனர்.


"குருஜி" என்றும் அழைக்கப்படும் பிடே, ஜனவரி 2014 ஆம் ஆண்டில், குஜராத் மாநில முதலமைச்சர் மற்றும் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சாங்கிலி மடத்தில் சந்தித்தபோதுதான் அவர் மீது தேசிய அளவில் கவனம் திரும்பியது.  மேலும் 2018 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதன் மூலம் பிடே மீது கவனம் திரும்பியது. தனது பழத்தோட்டத்தில் உள்ள மாம்பழங்களை உண்பதால் திருமணங்களில் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன என்று கூறினார். இந்த கருத்து மிகவும் சர்ச்சைக்குறியதாக மாறியது.  


ஸ்ரீ ஷிவ்பிரதிஷ்தான் ஹிந்துஸ்தான் என்ற தனது சொந்த அமைப்பை நிறுவுவதற்கு முன்பு, 80 வயதில் இருக்கும் பிடே, ஆர்எஸ்எஸ்-ன் முழுநேர பிரச்சாரகராகப் பணியாற்றினார். அவர் கோரேகான்-பீமா கலவரத்தில் சந்தேக நபராக பட்டியலிடப்பட்டார், ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை, பின்னர் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை கூறியது.