ISKCON: ’ஏமாத்துறாங்க.. கோசாலை குறித்து குற்றச்சாட்டு வைத்த மேனகா காந்தி.. அவதூறு நோட்டீஸ் அனுப்பிய இஸ்கான்..

இஸ்கான் அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்திக்கு எதிராக ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Continues below advertisement

இஸ்கான் அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்திக்கு எதிராக ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இஸ்கான் நாட்டின் கோசாலைகளில் இருக்கும் பசுக்களை கசாப்புக் கடைக்காரர்களுக்கு விற்பனை செய்து வருகிறது, இதனால் இஸ்கான் நாட்டிலேயே மிகப்பெரிய ஏமாற்று நிறுவனமாக உள்ளது என்று மேனகா காந்தி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து இஸ்கான் அமைப்பு அவருக்கு எதிராக இந்த அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Continues below advertisement

முன்னாள் மத்திய அமைச்சருக்கு எதிரான வழக்கை இஸ்கான் சட்டப்பூர்வமாக இறுதிவரை தொடரும் என இஸ்கான் துணைத் தலைவர் ராதாரமன் தாஸ் தெரிவித்துள்ளார். மேனகா காந்தியின் கருத்து துரதிர்ஷ்டவசமானது மற்றும் உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் படி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. "முன்னாள் அமைச்சராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி ஆதாரம் இல்லாமல் இஸ்கான் மீது பொய் சொல்ல முடியும்? அவர் அனந்த்பூர் கோசாலைக்கு சென்றதாக கூறினார். ஆனால் மேனகா காந்தி அங்கு சென்றது அங்குள்ளவர்களுக்கு நினைவில் இல்லை. அதனால் வீட்டில் அமர்ந்து அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்" துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

விலங்கு உரிமை ஆர்வலர் மேனகா காந்தியின் வீடியோ சமீபத்தில் வைரலானது, அதில் இஸ்கான்  நாட்டின் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் "அவர்கள் கோசாலைகளை நிறுவி அதை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி பெறுகிறார்கள். நான் அவர்களின் அனந்த்பூர் கோசாலையை பார்வையிட்டேன். ஒரு கன்றுக் குட்டி கூட இல்லை. அனைத்துமே பால் கரக்கும் பசு மாடுகள். இதனால் இஸ்கான் மாடுகளை கசாப்புக் கடைக்காரர்களுக்கு அனுப்புகிறது. அவர்கள் (இஸ்கான்) செய்யும் அளவுக்கு வேறு யாரும் இதனை செய்வதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.  

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இஸ்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டது மேலும் அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறியது. அந்த அறிக்கையில், "இஸ்கான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பசு மற்றும் காளை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் முன்னணியில் உள்ளது. பசுக்கள் மற்றும் காளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிமாறப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டப்பட்டதுபோல் கசாப்பு கடைகளுக்கு விற்கப்படவில்லை. மாட்டிறைச்சி உள்ள உலகின் பல பகுதிகளில் இஸ்கான் பசு பாதுகாப்புக்கு முன்னோடியாக உள்ளது. இந்தியாவிற்குள், நூற்றுக்கணக்கான புனிதமான பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து, அவற்றின் வாழ்நாள் முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்கும் 60 க்கும் மேற்பட்ட கோசாலைகள் இஸ்கான் நடத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

“இஸ்கான் மீது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக மேனகா காந்திக்கு ரூ.100 கோடி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இஸ்கான் பக்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உலகளாவிய சமூகம் இந்த அவதூறான, மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளால் மிகவும் வேதனையடைந்துள்ளது" என்று இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணைத் தலைவர் ராதாரம் தாஸ் கூறினார்.  

Continues below advertisement