தமிழ்நாடு:



  • ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது நமக்கு பெருமை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வருகிற 8ம் தேதி கடைசி நாள் - தேர்தல் ஆணையம் 

  • தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆக குறைந்தது. 

  • தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு

  • தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளிவைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

  • வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யும் என்பதால் அன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ரெட் அலார்ட் விடப்பட்டுள்ளது. 

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  • கல்லூரிக்கு நேரடியாகச் சென்று படிக்காமல், தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  • தமிழ்நாட்டில் 8, 9 தேதிகளில் கடலோற மாவட்டங்கள் மற்றும் உட்புற தமிழ்நாட்டில் பரவாலன இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


இந்தியா: 



  • மத்திய பிரதேசம்: அரசு சட்ட கல்லூரியில் மாணவிகள் நெற்றியில் பொட்டு வைக்க தடை

  • குளிர்கால கூட்டத்தொடர்: விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை பற்றி விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  • டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண்ணின் 33 வார கருவை கலைக்க,  டெல்லி  உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  • நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதற்கு காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

  • பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


உலகம்:



  • பஞ்சாப்பின் தார்ன் தரன் பகுதியில் காலியா என்ற கிராமம் அருகே, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் டிரோன் மூலம் 2.4 கிலோ எடை கொண்ட ஹெராயின் வகை போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

  • கொலாம்பியாவில் நிலச்சரிவு ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். 

  • ஆக்ஸ்ஃபோர்ட்டின் 2022-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ’Goblind Mode’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

  • கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையில் மீண்டும் விமான போக்குவரத்து சேவையை இலங்கை அரசு துவக்கவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு:



  • சீனியர் பெண்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுபமன் கில், அடுத்த 10 ஆண்டுகளில் பல சாதனைகளை படைப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

  • தென் கொரியாவுக்கு எதிராக அடுத்தடுத்து 4 கோலகள் அடித்து, கால் இறுதிக்குள் நுழைந்தது பிரேசில்