India Corona: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பா..? தினசரி பாதிப்பு கிடுகிடு உயர்வு..! என்ன நிலவரம்?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

Continues below advertisement

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

Continues below advertisement

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கடந்த புதன்கிழமை 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்தது. 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக சற்று குறைந்து பதிவானது.

நேற்றைய தினம் 6,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் கிடு கிடுவென உயர்ந்து 9,629 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தினத்தை விட 40% அதிகமாகும். இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,000 மாக குறைந்துள்ளது.  

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,23,045 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,369 ல் இருந்து 5,31,398 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.68 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,380 லிருந்து 61,013 ஆக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், சிகிச்சை பெற்று வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு:

தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 15,169 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5549 பேர், தலைநகர் டெல்லியில் 4995 பேர், உத்திர பிரதேசத்தில் – 4257 பேர், தமிழ்நாடு – 3585 பேர், ஹரியானாவில் – 5011 பேர், குஜராத்தில் – 1762 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 61,013 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,79,031 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 3 பேர், ராஜஸ்தானில் 3 பேர்,  உத்திர பிரதேசத்தில் 2 பேர், ஹரியானாவில் 2 பேர், குஜராத்தில் ஒருவர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதார துறை தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவிறுத்தப்பட்டுள்ளது.  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement