தமிழ்நாடு: 




  • சீனாவிலிருந்து மதுரை வந்த தாய்-மகள் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது




  • எந்த நிறுவனங்களிடமிருந்து மதுபானங்கள் வாங்கப்படுகின்றன? டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • பெங்களூரூவில் இருந்து சென்னை வழியாக அசாம் நோக்கிச் சென்ற ரயிலில், முன்பதிவு செய்யாமலும், பயணச்சீட்டு இல்லாமலும் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த 1000க்கும் மேற்பட்ட வட இந்தியர்களை இறக்கிவிட்ட இரயில்வே காவல்துறையினர். 


  • நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பதுதான் விளக்கம் என கோவை வந்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 



  • ஆதார் போல் தமிழக அரசு  மக்கள் ஐடி கொண்டுவர திட்டமிட்டுள்ளது என தகவல். 

  • குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிச.30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.


  • ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் சசிகலா குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.




  • பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பை உறுதிசெய்ய பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 




  • புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் கோயிலுக்குள் தங்களை அனுமதிப்பதில்லை என்ற புகாரை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பட்டியிலின மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 2பேர் கைது. 



  • சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழாவுக்கு இன்று கொடியேற்றம் நடைபெறவுள்ளது. 


  • தமிழ்நாட்டில் நாளை வரை  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 




இந்தியா



  • பல்வேறு நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

  • புதுச்சேரியில் பொதுப் இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

  • திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

  • 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை; பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழக விவசாயிகள்

  • மைசூரூ அருகே பிரதமரின் சகோதரர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி பிரகலாத் மோடிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 


  • பெண்ணின் நிதி ஆதாரங்களை பறிப்பதும் குடும்ப வன்முறை மற்றும் பொருளாதாரா துஷ்பிரயோகம் தான், என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




  • கடந்த சில மாதங்களாக ரயில்களில் அதிகரித்து வரும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல புதிய விதிமுறைகளை இந்திய ரயில்வே விதித்துள்ளது.




உலகம்:




  • அமெரிக்காவில் ‘பாம்’ புயலால் 60 பேர் உயிரிழப்பு.. பலர் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. 




  • சீனாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை என சீனா அறிவித்துள்ளது. 




  • பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 13 பேர் உயிரிழப்பு.. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்




விளையாட்டு



  • பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இரட்டைச் சதம் அடித்து அசத்தல்; சச்சினின் சாதனையை சமன் செய்து உலக சாதனை.

  • இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியை ஹர்திக் பாண்டயா வழிநடத்துவார் என அறிவிப்பு. சீனியர் ப்ளேயர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

  •