7 AM Headlines: காலை 7 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நிகழ்ந்தது என்னென்ன..?

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

  • கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுபபிரமணியம் தெரிவித்துள்ளார். 
  • தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதையில் கார் கவிந்து 8 பேர் பலி; சபரிமலைக்குச் சென்று திரும்புகையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 
  • மதத்தின் பெயரால் அரசியல் செய்வோருக்குய் எதிரானது திமுக அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 
  • பொங்கல் பரிசுப்பொருட்களில் கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை; சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு தமிழக மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம். 
  • பொங்கலுக்கு ரூபாய் 5 ஆயிரத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் பழனிச்சாமி கோரிக்கை; கரும்புடன் பனைவெல்லம் வழங்கவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளனர்.  
  • இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. 
  • தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தரப்பில் காவல் துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 
  • தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்துக்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியா:

  • சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
  • நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 
  • சிக்கிம்மில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; 4 பேர் மருத்த்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். 
  • பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முன் கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  • மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

உலகம்:

  • அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கவுள்ள நிலையில்,  கடும் குளிர் பாதிப்பு ஏற்படுத்தும் என அரசு மக்களை எச்சரித்துள்ளது. 
  • சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பதிப்பு 3.7 கோடி பேர் இதுவரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல். 
  • பாரீஸில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம். துப்பாக்கிச்சூடு நடத்திய 60 வயது முதியவர் கைது. 
  • பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு அசம்பாவிதத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு மற்றும்  6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விளையாட்டு:

  • ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக சாம்கரன் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான். 
  • இந்தியா வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டில்  முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களும், இந்திய அணி 314 ரன்களும் எடுத்த நிலையில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.  
  • வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் சதத்தினை தவறவிட்டுள்ளார். 
Continues below advertisement
Sponsored Links by Taboola